அறிவியல் துறையில் அதிக முதலீடு செய்யாத முட்டாள் அரசியல்வாதிகள்- விஞ்ஞானி ராவ்

பெங்களூரை சேர்ந்த விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதைத்தொடர்ந்து, அவர் நேற்று பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அதிநவீன விஞ்ஞானத்தை கொண்ட நாடுகள் தான் உலகளவில் உண்மையான வளர்ச்சியை எட்டி உள்ளது. அவ்வாறு இல்லாத நாடுகள் தெரியாமல் போய் விடும். அதனால் எதிர்கால இந்தியா, விஞ்ஞானத்தில் தான் உள்ளது.
இதை கருத்தில் கொண்டு இந்தியாவின் பாதுகாப்புக்காக கல்வி, விஞ்ஞான துறைகளில் அதிக நிதியை அரசு முதலீடு செய்ய வேண்டும். நாட்டின் பங்கு குறியீடு, தொழில் நன்றாக இருந்தால் மட்டும் நல்ல நிலையை எட்டி விட முடியாது.
நிரந்தரமாக நல்ல நிலைக்கு அதிநவீன விஞ்ஞானம் மிகவும் அவசியம். முன்னேற்றத்துக்கான வழி என்றால் அது விஞ்ஞானம் தான். இதன் மீது மறைந்த முன்னாள் பிரதமர் நேரு நம்பிக்கை கொண்டவர் என்பது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், விஞ்ஞான துறைக்கு அதிக ஒத்துழைப்பு கிடைக்காதது துரதிர்ஷ்டவசமானது.
கல்வி மற்றும் விஞ்ஞான துறையில் எவ்வளவு முதலீடு செய்கிறோமோ அதை பொறுத்து தான் நாட்டின் எதிர்காலம் இருக்கும். ஆனால் முட்டாள் அரசியல்வாதிகள் அறிவியல்துறைக்கு போதிய பணம் ஒதுக்குவது இல்லை.
இவ்வாறு சி.என்.ஆர். ராவ் கருத்து தெரிவித்திருந்தார்.
விஞ்ஞானி சி.என்.ஆர். ராவின் இந்த கருத்து அரசியல்வாதிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications