ம.பி.யில் மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்... கொரோனாவை விரட்ட தீப்பந்தம் ஏந்திய கிராம மக்கள்..!
போபால்: மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனாவை ஓடக் கூறி பொதுமக்கள் தீப்பந்தத்துடன் ஓடிய நிகழ்வு நடந்துள்ளது.
கொரோனாவை ஒழிக்கும் பணிகளில் உலக நாடுகள் முழுவதும் அறிவியல் ரீதியான முயற்சிகளை முன்னெடுத்து வரும் சூழலில், இப்படிப்பட்ட நிகழ்வுகளும் ஆங்காங்கு நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
கொரோனா என்பதை தீயசக்தியாக கருதும் அந்த கிராமமக்கள், நெருப்பைக் கொண்டு அதனை விரட்ட முடியும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்துள்ளனர்.

தீப்பந்தம்
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்கும் பணிகளில் மத்திய மாநில அரசுகளே திணறி வருகின்றன. இந்தச்சூழலில், மத்தியப் பிரதேசம் மாநிலம் அஹர் மால்வா மாவட்டத்தில் உள்ள கணேஷ்புரா என்ற கிராமத்தில் தீப்பந்தத்தை கொண்டு கொரோனாவை விரட்டும் கூத்து அரங்கேறியுள்ளது.

முழக்கம்
வாரத்துக்கு இரண்டு நாட்கள் வீதம் இரவு நேரங்களில் தீப்பந்தத்தை கைகளில் எடுக்கும் கணேஷ்புரா கிராமமக்கள், 'ஓடு கொரோனா ஓடு' என்ற முழக்கத்துடன் ஊரைச் சுற்றி வருகின்றனர். குடும்பத்தில் ஒருவர் இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்பது அந்தக் கிராமத்தின் கட்டுப்பாடு. ஊரை ஒரு சுற்று சுற்றி வந்ததும் கைகளில் வைத்துள்ள தீப்பந்தங்களை ஊரின் எல்லையில் தூக்கி விசிவிடுகின்றனர்.

விழிப்புணர்வு
இவ்வாறு செய்வதன் மூலம் கொரோனா வைரஸ் தங்கள் ஊருக்குள் நுழையாது என்பது அந்த ஊர் மக்களின் நம்பிக்கையாக (?) உள்ளது. கொரோனாவின் தீவிரமும், அது பரவும் விதமும் பற்றிய விழிப்புணர்வு இன்னும் முழுமையாக மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளே உதாரணம்.

மத்திய அமைச்சர்
கடந்தாண்டு கொரோனாவின் முதலாவது அலை வந்த போது மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ''கோ கொரொனா கோ கொரொனா'' தனது வீட்டின் முன்பு நின்று முழங்கியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ம.பி.யில் நடந்துள்ள இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன் அது குறித்த விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications