டெல்லியில் மறுதேர்தலைத் தவிர்க்கவே ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளித்தோம்: காங்கிரஸ் தகவல்
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அந்த கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ள ஆதரவை உடனடியாக விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கட்சி ஆரம்பித்த ஓராண்டிற்குள் டெல்லியில் ஆட்சி அமைக்கும் அளவிற்கு மக்களிடையே ஆதரவைப் பெற்றக் கட்சியான ஆம் ஆத்மியின் சமீபத்திய நடவடிக்கைகள் பல விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளன. அதிலும் குறிப்பாக, கடந்த 25-ந் தேதி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு ஆற்றிய குடியரசு தின உரையில், ‘விளம்பரம் தேடும் நோக்கத்தில் நடத்தப்படும் கலகங்கள், ஆட்சி திறன் ஆகாது' என அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்டத்தை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி குடியரசுத் தலைவரின் கண்டனத்திற்கும், விமர்சனத்திற்கும் ஆளாகியிருப்பது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. மேலும், இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் முகுல் வாஸ்னிக் கூறியிருப்பதாவது :-
பல்வேறு விஷயங்களை ஆராய்ந்த பின்னரே ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளித்துள்ளோம். அதனால் அந்த கட்சியின் நடவடிக்கைகளை பொறுமையாக கவனித்து வருகிறோம்' என்றார்.
அதே சமயத்தில், சோம்நாத் பார்தி குடியரசுத்தலைவரை விமர்சிக்கும் வகையில் டுவிட்டர் பக்கத்தில் பதில் கருத்து வெளியிட்டதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘குடியரசுத்தலைவர் ஒரு ராஜதந்திரி. அவரது கருத்து, எல்லோருக்கும் வழிகாட்டும். அவரது கருத்தை விமர்சிப்பது முறையல்ல' என முகுல் தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லியில் மறு தேர்தல் நடைபெறுவதை தவிர்க்கவே ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்கப்பட்டதாகவும் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்!












Click it and Unblock the Notifications