இந்திய - அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம்... ஒபாமா வருகை குறித்து டுவிட்டரில் மோடி கருத்து
டெல்லி: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தியப் பயணம், இரு தரப்பு உறவில் புதிய அத்தியாயத்தை தொடக்கி வைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
66வது குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா. பிரதமர் மோடியுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஒபாமா நேற்று சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றார்.
இந்த சந்திப்பின் போது, ஒபாமாவும், மோடியும் தங்களை நெருங்கிய நண்பர்கள் எனக் குறிப்பிட்டுக் கொண்டனர். அவர்களது செயல்பாடுகளும் அவ்வண்ணமே இருந்தது.
Farewell @WhiteHouse! Your visit has taken India-USA ties to a new level & opened a new chapter. Wish you a safe journey.
— Narendra Modi (@narendramodi) January 27, 2015 மோடியுடன் ஒபாமா இணைந்து உரையாற்றிய ‘மன் கி பாத்' நிகழ்ச்சி நேற்று வானொலியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஒபாமா சவுதி அரேபியா சென்றிருப்பதால் இந்த வானொலி உரையை அவர் கேட்க வாய்ப்பில்லை என அதன் ஆடியோ மற்றும் அப்போது எடுக்கப் பட்ட புகைப்படங்களை அவருக்கு அனுப்பியுள்ளார் மோடி.
மேலும், ஒபாமாவின் இந்தியப் பயணம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, ‘உங்களது (ஒபாமா) பயணம், இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை புதிய கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இது, இரு நாடுகளின் உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளது.
டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியின்போது மழை பெய்தது, ஒபாமாவுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. இதனால், குடையை தனது கையில் ஒபாமா கொண்டு வர வேண்டியதாகிவிட்டது.
அமெரிக்கப் பாடகர் மரியன் ஆண்டர்சன் 1957ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது அகில இந்திய வானொலிக்கு அளித்த பேட்டி, பதிவு செய்யப்பட்ட விடியோ காட்சிகளின் நகல்களை ஒபாமாவிடம் பரிசாக அளித்தேன்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையின் நன்றி :
இதேபோல், அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை, ஒபாமாவின் இந்தியப் பயணத்தை வெற்றிகரமாக்கியதற்காக பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சுட்டுரை சமூக வலைதளப் பக்கத்தில் வெள்ளை மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், "இந்த பயணம் வெற்றிகரமானதாக அமைந்ததற்கு, நரேந்திர மோடிக்கு நன்றி; சிறப்பான வரவேற்பு அளித்த இந்திய மக்களுக்கு நன்றி' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications