காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பெங்களூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவில் கபினி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதுபோல் அணையில் இருந்து 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் தற்போதைய நீர்மட்டம் கடல் மட்டத்தில் இருந்து 2,275 அடியாகும். அணையின் மொத்த கொள்ளளவான 2,284அடியை (கடல் மட்டத்தில் இருந்து) விரைவில் தொட்டுவிடும் நிலை உள்ளது.
இதேபோல், மைசூர் அருகேயுள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பருவமழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 83.85ஆக இருந்தது. இதன் மொத்த கொள்ளளவு 124.40 அடி.
அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 90 கனஅடி தண்ணீர் உள்ளே வருகிறது. இதில் 363 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரி அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதே இந்த மழைப்பொழிவுக்கு காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கர்நாடக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications