மணிப்பூரில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக.. கரைந்து போன காங்கிரஸ்: இந்தியா நியூஸ் ஜன்கிபாத் சர்வே
இம்பால்: மணிப்பூரில் நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்பில் மீண்டும் பாஜக வெற்றி பெறும் என இந்தியா நியூஸ் ஜன்கிபாத் கூறியுள்ளது.
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. நடந்து முடிந்துள்ள தேர்தலில் மீண்டும் பாஜக தான் ஆட்சிக்கு வரும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வந்துள்ளன.
கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர் என ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் இன்றோடு முடிவடைந்துள்ளன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்தியா நியூஸ் ஜன்கிபாத்
இந்தியா நியூஸ் ஜன்கிபாத் நிறுவனம் மணிப்பூர் மாநிலத்துக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில், பாஜக 23-28 இடங்களும், காங்கிரஸ் கட்சி 14-10 இடங்களும், தேசிய மக்கள் கட்சி 7-8 இடங்களும், நாகா கட்சி 8-5 இடங்களும், ஜேடியூ 5-7 இடங்களும், சுயேட்சைகள் 03-02 இடங்களையும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

பாஜக
இந்தியா நியூஸ் ஜன்கிபாத் நிறுவனம் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 இடங்களில் பாஜக 23-28 இடங்களைப் பிடித்து மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.
இந்த தேர்தலை பாஜக தனித்து சந்தித்தது. அதேநேரத்தில் 17 ஆயூதம் ஏந்திய இயக்கங்களின் கூட்டமைப்பான குக்கி தேசிய கூட்டமைப்பு பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது

காங்கிரஸ்
பாஜக கடந்த தேர்தலில் பாஜக 60இடங்களில் 21 இடங்கள் தான் பெற்றிருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி 28 இடங்களைப் பெற்றிருந்தது. காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும் என்று எண்ணிய நிலையில் நாகா, மக்கள் கட்சிகளோடு தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்து மணிப்பூரில் ஆட்சியைப் பிடித்தது பாஜக.

கூட்டணி
இந்த கருத்துக்கணிபின் படி, காங்கிரஸ் அதிகபட்சமாக 14 இடங்களைப் பிடிக்கும் என்று தெரியவருகிறது. மணிப்பூரில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, பாஜக அல்லது காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகள் உதவியுடன் ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications