இஸ்லாமாபாத்தில் ஜன.15-ல் இந்தியா- பாக். வெளியுறவு செயலர்கள் பேச்சுவார்த்தை
டெல்லி/ இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வரும் 15-ந் தேதி இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் சர்ஜாஸ் அசிஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் திடீரென பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டிருந்தார். இதையடுத்து இருநாடுகளிடையே உறவு சீர்பட ஆரம்பித்தது.

இதை சீர்குலைக்கும் வகையில் பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லை தாண்டி ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதில் 7 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்குள்ளான விமான படை தளத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். இத்தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியும் வருகிறது.
இந்நிலையில் வரும் 15-ந் தேதியன்று இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் இடையேயான பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் தெரிவித்துள்ளார். இப் பேச்சுவார்த்தையில் காஷ்மீர் விவகாரம், பதன்கோட் விமானப்படை தளம் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
-
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications