இஸ்லாமாபாத்தில் ஜன.15-ல் இந்தியா- பாக். வெளியுறவு செயலர்கள் பேச்சுவார்த்தை
டெல்லி/ இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வரும் 15-ந் தேதி இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் சர்ஜாஸ் அசிஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் திடீரென பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டிருந்தார். இதையடுத்து இருநாடுகளிடையே உறவு சீர்பட ஆரம்பித்தது.

இதை சீர்குலைக்கும் வகையில் பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லை தாண்டி ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதில் 7 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்குள்ளான விமான படை தளத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். இத்தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியும் வருகிறது.
இந்நிலையில் வரும் 15-ந் தேதியன்று இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் இடையேயான பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் தெரிவித்துள்ளார். இப் பேச்சுவார்த்தையில் காஷ்மீர் விவகாரம், பதன்கோட் விமானப்படை தளம் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
-
எவ்வளவு அடி வாங்கியும் திருந்தல.. வாயை விடும் பாக். அமைச்சர்! இந்தியாவின் ஒரு தாக்குதலுக்கு தாங்காது -
ஈரான் போரால் பாகிஸ்தானுக்கு பேரிடி.. இப்படி நடக்கும்னு எதிர்பார்த்து இருக்கவே மாட்டாங்கே.. போச்சே -
SC, ST இட ஒதுக்கீடு இரண்டு மடங்கு உயர்வு.. மாநில அரசு எடுத்த மிக முக்கியமான முடிவு -
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
இந்தியாவுக்கு வர வேண்டிய ஈரான் எண்ணெய் கப்பல்.. சீனாவுக்கு திடீர் யூ-டர்ன்.. நடந்தது என்ன? -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications