இந்தியா-இலங்கை மீனவர்கள் இடையே ஏப்ரல் 7- ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை
இந்தியா இலங்கை மீனவர்கள் இடையிலான பேச்சுவார்த்தை கொழும்புவில் நடைபெற உள்ளது.
டெல்லி: இந்திய- இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பாக கொழும்பில் வரும் 7-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய- இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண டெல்லியில் கடந்த ஆண்டு நவம்வர் 2-ம் தேதி இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நவம்பர 5-ம் தேதி மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்திய- இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் அளவிலான கூட்டமும் நடைபெற்றது.

இக்கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான மீன்வளம் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி பேசி முடிவு எடுக்க கூட்டு செயல்திட்டக் குழு கூட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும், இரு நாட்டு மீன்வளத் துறை அமைச்சர்கள் கூட்டத்தை 6 மாதங்களுக்கு ஒரு முறையும் கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த ஜனவரி 2-ம் தேதி இரு நாட்டு வெளியுறவு அமைச்சகங்கள், கடற்படை, கடலோரக் காவல் படை பிரதிநிதிகள் பங்கேற்ற இரண்டாவது பேச்சு வார்த்தை கொழும்பில் நடைபெற்றது.
இந்நிலையில் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை வரும் 7 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் இருநாட்டு மீனவர்களும் கலந்துகொள்ள உள்ளனர். இதில் மீனவரகள் பிரச்சினை குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications