மகாராஷ்டிராவில் இந்திய கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து.. ஒருவர் படுகாயம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திய கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திய கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
ரைகாட் மாவட்டத்தில் உள்ள நந்தகன் என்ற கடலோர பகுதியில் இந்த விபத்து நடந்து இருக்கிறது. சோதனைக்காக வட்டமிட்டு வந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளது.

இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனாலும் இதில் முறையாக விசாரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்கள்.
ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டதில் மொத்தம் சென்ற 5 பேரில் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அவர் தற்போது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications