ஈராக்கில் ஹரியானா மாநிலத்தவர் 127 பேர் தத்தளிப்பு!
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 127 பேர் ஈராக்கில் தத்தளித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஹரியானா மாநில அரசு 24 மணி நேர உதவி மையம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிரான சன்னி முஸ்லிம்களின் உள்நாட்டுப் போர் உச்சமடைந்துள்ளது. ஈராக் நாட்டின் பல நகரங்கள் சன்னி முஸ்லிம்கள் அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். வசமாகி உள்ளன.
இந்த நகரங்களில் பணியாற்றி வந்த சுமார் 18 ஆயிரம் இந்தியர்களின் கதி கேள்விக்குறியாகி உள்ளது. ஏற்கெனவே தெலுங்கானாவைச் சேர்ந்த 600 பேர் அங்கு சிக்கியிருப்பதாக கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 40 பேர் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகின. இவர்களில் ஒருவர் தப்பி வந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் திக்ரீத் நகரில் தமிழகம், கேரள செவிலியர்கள் 46 பேர் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 127 பேர் ஈராக்கில் சிக்கியிருப்பதாக அம்மாநில அரசுக்கு குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தொடர்பு கொண்டு மாநில முதல்வர் ஹூடா, தத்தளிக்கும் ஹரியானா மாநிலத்தவரை மீட்க கோரினார்.
இதனிடையே ஹரியானா மாநில அரசும் 24 மணி நேர தொடர்பு மையம் ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளது. இம்மையத்தின் தொடர்பு எண்: 0172-5059197
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications