ஜனாதிபதி தேர்தல்.. சுஷ்மா சுவராஜை களமிறக்க பாஜக திட்டம்?
ஜனாதிபதி தேர்தலில் வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள சுஷ்மா ஸ்வராஜ் வேட்பாளராக களம் இறக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன..
டெல்லி: அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தலில் பாஜக சார்பில் வெளியுறுவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வேட்பாளராக இறக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2012-ல் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது ஓய்வு பெறவுள்ளார். இவரது பதவிக் காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனால் அடுத்ததாக அந்த பதவிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்று ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக பாஜக இதில் தீவிரமாக உள்ளது.

ஜோஷி இல்லை
ஆர்எஸ்எஸ் அமைப்பு, பாஜக மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷியை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தது. ஆனால் அவர் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறதால் அவரது பெயர் கைவிடப்பட்டது. அத்வானி பெயரும் பரிசீலிக்கப்பட்டு அதுவும் போண்டியானது.

சுமித்ரா மகாஜன், முர்மு
இந்நிலையில் லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்மு ஆகியோரை வேட்பாளராக நிறுத்த பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அவர்களை நிறுத்தினால் பொது வேட்பாளராக அங்கீகரிக்க எதிர்க்கட்சிகள் மறுக்கும் என்று பாஜக கருதுகிறது.

பாஜக உறுதி
அதேவேளையில் அரசியலுக்கு அப்பாற்றபட்டவர்களை ஜனாதிபதியாக்கக் கூடாது என்ற முடிவில் பாஜக, சங் பரிவார் அமைப்புகள் உறுதியாக உள்ளன. எனவே சுஷ்மா ஸ்வராஜை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தினால் அவரை எதிர்க்கட்சிகள் எதிர்க்காது என்றும் கருத்தொற்றுமை ஏற்படும் என்றும் பாஜக தற்போது நம்புகிறதாம்.

மம்தா ஆதரவு
எதிர்க்கட்சிகளை பொருத்தவரை ஜனாதிபதி வேட்பாளர் என்பவர் மதசார்பற்றவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. இதையே தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கருதுகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கும் சுஷ்மாவுக்கு ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது.

சுஷ்மாவுக்கு பிரச்சினை இல்லை
வெளியுறவுத் துறை அமைச்சர் என்பவர் வெளிநாடுகளுக்கு சென்றே ஆக வேண்டும் என்பது கட்டாயம். இப்பதவியில் உள்ள சுஷ்மாவுக்கு சமீபத்தில்தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனால் அவரால் முன்புபோல் வெளிநாடுகளுக்கு செல்ல முடிவதில்லை என்பதால் ஜனாதிபதி பதவியை ஏற்க அவருக்கு பிரச்சினை ஏதும் இருக்காது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வேட்பாளர் யார்
இதற்கிடையே, ஜூன் 25-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா பயணம் செல்வதற்கு முன்னர் அதாவது ஜூன் 24-ஆம் தேதிக்குள் வேட்புமனுதாக்கல் உள்ளிட்ட பணிகளை முடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications