தனிமனித சுதந்திரம் அடிப்படை உரிமையா? வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு!
தனி மனித சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையா என்பது குறித்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: தனி மனித சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையா என்பது குறித்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் அரசாணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் ஆதார் என்பது தனிமனித சுதந்திரத்தை மீறுவதாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி 2015ஆம் ஆண்டு கூறிய தனிமனித சுதந்திரம் என்பது, ஒருவருக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை இல்லை என மீண்டும் மீண்டும் கூறினார்.
மேலும் இந்த தீர்ப்பை மிகப் பெரிய அமர்வு விசாரிக்க வேண்டும் என சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து தனிமனித சுதந்திரம், அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றா என்பது குறித்து 9 நீதிபதிகள் அமர்வு இன்று முதல் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.
தனி மனித உரிமை கேள்வி குறித்து 9 நீதிபதிகள் அரசியலமைப்பு பெஞ்ச்சில் தீர்க்கப்பட்டவுடன், ஆதார் தொடர்பான மீதமுள்ள பிரச்சினைகள் ஒரு சிறிய பெஞ்சில் விசாரிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தனி மனித சுதந்திரத்துக்கு உரிமையுண்டு என்று பெரிய பெஞ்ச் முடிவு செய்திருந்தால், அதன் நோக்கத்தை சிறிய பெஞ்ச் வரையறுக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை 9 நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications