அசோக் சிங்கால் மரணத்தை கொண்டாடிய ஐஎஸ்ஐஎஸ்.. காஷ்மீரில் கால்பதிக்க தொடர் முயற்சி
டெல்லி: விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர், அசோக் சிங்கால் மரணத்தை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 'நல்ல செய்தி' என்று கூறி கொண்டாடிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில், அதுவும் குறிப்பாக காஷ்மீரில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் கால் பதிக்க முயன்றுவருவதாக கிடைத்துள்ள உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து தீவிரவாதிகளுடன் இந்தியாவிலிருந்து உரையாடுவோரின் இணையதள உரையாடல்களை தேசிய பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரிகள் இடைமறித்து கேட்டபோது, சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அசோக் சிங்கால் கடந்த 2015, நவம்பர் 17ம் தேதி மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து, சிராஜுதின் என்ற தீவிரவாதி தனது சகாக்களுக்கு அனுப்பிய தகவலில் "நல்ல செய்தி, அசோக் சிங்கால் மரணமடைந்தார்" என்று கூறப்பட்டிருந்ததாம்.
உரையாடல்களில், இந்தியா மீது அந்த தீவிரவாதிகளுக்கு மிகுந்த வெறுப்புணர்வு இருப்பதும் தெரியவந்தது. இந்தியா அரசியலமைப்புபடி இயங்க கூடாது, காலிபா ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமாக உள்ளதாம். இந்தியாவின் ஒவ்வொரு விவகாரங்களையும் அவர்கள் உரையாடியுள்ளது அம்பலமாகியுள்ளது. அசோக் சிங்கால் மரணத்தை பெரிய கொண்டாட்டமாக நடத்தியுள்ளனர் தீவிரவாதிகளும், அவர்களின் ஆதரவாளர்களும்.
இந்தியாவில் இருந்து நிறைய இளைஞர்களையும், பெண்களையும் தங்களது அமைப்பில் சேர்த்துக்கொள்ள ஐஎஸ்ஐஎஸ் துடியாய் துடித்துக்கொண்டுள்ளதும் இந்த உரையாடல்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக காஷ்மீரில் கால் பதிக்க எத்தனித்துக்கொண்டுள்ளது அந்த அமைப்பு. காஷ்மீரை காலிபா ஆட்சியின் கீழ்தான் கொண்டுவர வேண்டுமே தவிர பாகிஸ்தானிடம் கொடுக்க கூடாது என்பதிலும் உறுதியாக உள்ளனராம். காஷ்மீருக்கு தனி பணம் அச்சிடுவது வரை அவர்களது உரையாடல்கள் நீண்டுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications