உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்... ஜெயலலிதாவே முடிவு செய்வார்: ராம் ஜெத்மலானி
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஜெயலலிதாவிற்கு பெங்களூர் உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் எப்போது மனுத்தாக்கல் செய்வது என்பது குறித்து தனது கட்சிக்காரரே முடிவு செய்வார் எனத் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி.
18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 27ம் தேதி தீர்ப்பு வழங்கியது பெங்களூர் நீதிமன்றம். அதன்படி, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது. தீர்ப்பை அடுத்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார் ஜெயலலிதா.

அவருக்கு ஜாமின் வழங்கக்கோரி பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு இன்று நீதிபதி சந்திரசேகரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார்.
தனது வாதத்தில், ‘ஜெயலலிதாவிற்கு 66 வயதாகிறது என்றும், அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளது எனவும் வாதிட்ட ஜெத்மலானி, உச்சநீதிமன்றம் லாலுவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியதை முன்மாதிரியாக கொண்டு ஜெயலலிதாவையும் ஜாமினில் விடுதலை செய்யவேண்டும் என்று வாதிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞரும் ஜெயலலிதாவிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கலாம் என்றும் ஜெத்மலானி தெரிவித்தார்.
ஆனால், சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு சரியானது என்று கூறி ஜெயலலிதாவின் ஜாமின் மனுவை நிராகரித்தார் நீதிபதி சந்திரசேகரா. இதனால் அதிமுகவினர் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், இத்தீர்ப்பு குறித்து ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி கூறுகையில், ‘உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு ஏமாற்றமளிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் எப்போது, எவ்வாறு முறையிடுவது என்பதை எனது கட்சிக்காரர் முடிவு செய்வார்' எனத் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications