பத்திரிகையாளர் கொலையில் பாஜக முன்னாள் அமைச்சரின் மகனுக்கு தொடர்பு?
அகமதாபாத்: குஜராத்தில் செயல்பட்டு வரும் ஜெய் ஹிந் சஞ் பத்திரையின் செய்தியாளர் கிஷோர் தவே கொலை செய்யப்பட்டத்தில் குஜராத் முன்னாள் அமைச்சரின் மகனான பவேஷ் சுரேஜாவின் கைவரிசை இருப்பதாக கொலை செய்யப்பட்ட கிஷோரின் சகோதரர் பிரகாஷ் புகார் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது ஜெய் ஹிந் சஞ் என்ற பத்திரிகையின் அலுவலகம். இந்தப் பத்திரிகையில் செய்தியாளராக பணி புரிந்து வந்தார் கிஷோர் தவே. நேற்று அவரது பத்திரிகை அலுவலகத்திலேயே அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனையடுத்து அவரது வீட்டார் புகார் தெரிவித்ததையடுத்து போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத் நீர்வளத்துறையின் அமைச்சராக இருந்த ரதி சுரேஜாவின் மகனான பவேஷ் சுரேஜாவிற்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாக கிஷோர் தவேயின் சகோதரர் பிரகாஷ் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், சில நாட்களுக்கு முன், கிளினிக் ஒன்றில் பெண் ஒருவரை சில்மிஷம் செய்த பவேஷ் சுரேஜா குறித்த செய்தியை கிஷோர் வெளியிட்டிருந்தார் என்றும் அதனைத் தொடர்ந்து பவேஷ் சுரேஜாவிடம் இருந்து கொலை மிரட்டல்கள் கிஷோருக்கு வந்து கொண்டே இருந்தது என்றும் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த கொலையும் நடந்துள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே ஆம் ஆத்மி கட்சியினர், பத்திரிகையாளர் கிஷோரின் கொலையை கண்டித்து அகமதாபாத்தில் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications