ஓய்வு பெறுகிறார் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர்.. கடைசி பணிநாளில் தீபக் மிஸ்ராவுடன் மேடை பகிர்வு!
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் தனது கடைசி பணி நாளான இன்று தீபக் மிஸ்ராவுடன் மேடையை பகிர்ந்துகொண்டார்.
Recommended Video

டெல்லி: உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் தனது கடைசி பணி நாளான இன்று தீபக் மிஸ்ராவுடன் மேடையை பகிர்ந்துகொண்டார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் செல்லமேஸ்வர் உள்ளார். இவர் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாவார்.
கடந்த ஜனவரி 12ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து புகார் தெரிவிக்க செய்தியாளர் சந்திப்பை கூட்டி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்தநிலையில் அவரது பதவிக்காலம் இந்த மாதம் 22-ம் தேதி முடிவடைகிறது.

கடைசி பணிநாள்
இன்றே உச்சநீதிமன்றத்தின் கடைசி பணிநாள் ஆகும். நாளை முதல் உச்சநீதிமன்றத்திற்கு 41 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபக் மிஸ்ரா-செல்லமேஸ்வர்
இந்நிலையில் தனது கடைசி பணி நாளில் தலைமை நீதிபதிக்கு மரியாதை அளிக்கும் வகையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் செல்லமேஸ்வர் மேடையை பகிர்ந்துகொண்டார். இதில் நீதிபதி டிஒய் சந்திரசட் பங்கேற்றார்.

தீபக் மிஸ்ரா மீது புகார்
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வரர் உட்பட 4 நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். வழக்குகள் ஒதுக்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது அவர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

தலைமை நீதிபதியுடன்
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் மாண்பையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் வகையில் மனக்கசப்புகளை மறந்து செல்லமேஸ்வர், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுடன் தனது கடைசி பணி நாளை தலைமை நீதிபதியுடன் கழித்துள்ளார்.

ஏற்கனவே அப்படிதான்
முன்னதாக சுப்ரீம்கோர்ட் பார் அசோசியேஷன் இன்று நடத்த இருந்த பிரிவு உபசார விழாவில் பங்கேற்க செல்லமேஸ்வர் மறுத்து விட்டார். ஆந்திர உயர்நீதிமன்றத்தில் இருந்து மற்றொரு உயர்நீதிமன்றத்திற்கு சென்ற போதும் தான் பிரிவு உபசார விழாவை ஏற்கவில்லை என்று நீதிபதி செல்லமேஸ்வர் கூறினார்.

நினைவு கொள்ளும்
இருப்பினும் மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தத்தா, பிரஷாந்த் பூஷன், கோபால் சங்கரநாராயணன் அவருக்கு குறுகிய பிரிவு உபசார உரையாற்றினர். அப்போது பேசிய பிரஷாந்த் பூஷன் எதிர்காலம் இந்த நாட்டுக்கும் ஜனநாயகத்திற்கும் உங்களின் பங்களிப்பை நினைவுகொள்ளும் என்றார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications