தமிழக எல்லையில் கன்னட பள்ளிகளை மூடியதை எதிர்த்து பந்த்.. வாட்டாள் அறிவிப்பு
பெங்களூரு: தமிழக எல்லையில் உள்ள கன்னடப் பள்ளிகளை தமிழக அரசு மூடியுள்ளதை எதிர்த்து ஜனவரி 21ம் தேதி சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் பந்த் நடத்தப்படும் என்று கன்னட சலுவளி கட்சியின் தலைவரான வாட்டாள் நாகரா் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கர்நாடக எல்லையான சாம்ராஜ்நகரை ஒட்டி உள்ள தமிழக எல்லையில் பல ஆண்டுகளாக கன்னட ஆரம்பப்பள்ளிகள் செயல்பட்டு வந்தன. ஆனால், இந்த பள்ளிகளை மூடிவிட்டு, இங்கு பணியாற்றிய கன்னட மொழி ஆசிரியர்களை தமிழக அரசு வீட்டுக்கு அனுப்பி உள்ளது.

தமிழக எல்லையில் உள்ள தாளவாடியில் தற்போது 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள கன்னட வழி பள்ளியில் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் படித்து வந்தனர். கன்னட பள்ளிகளை மூடிவிட்டு இங்கு தமிழ் பள்ளிகளை தமிழக அரசு துவங்கி உள்ளது.
தமிழக அரசின் இத்தகைய துரோக செயல் கண்டனத்துக்குரியது. தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வரும் 21ம் தேதி சாம்ராஜ்நகர் எல்லையில் பந்த் போராட்டம் நடத்தப்படும் என்றார் வாட்டாள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications