அரசியல் வாழ்வில் முதல் நெருக்கடி.. கர்நாடகாவிலிருந்து ரஜினிகாந்த்துக்கு தொடங்கும் சத்திய சோதனை!
கர்நாடகாவில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு ரஜினிகாந்தை பிரச்சாரம் செய்ய அழைக்க பாஜக முடிவு செய்து இருக்கிறது.
பெங்களூர்: கர்நாடகாவில் இந்த வருடம் சட்ட மன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலுக்கு பாஜக சார்பாக ரஜினியை பிரச்சாரம் செய்ய வைக்க அந்த கட்சி முடிவு செய்து இருக்கிறது.
இப்போதே அம்மாநில பாஜக உறுப்பினர்கள் இதற்கான பணிகளில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் கண்டிப்பாக பாஜக கட்சிக்காக கர்நாடகாவில் பிரச்சாரம் செய்வார் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.
ரஜினி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்ட அடுத்த நாளே இப்படி ஒரு தகவல் வந்து இருக்கிறது. அரசியலின் சோதனை தற்போது ரஜினியை ஆட்டிப்படைக்க தொடங்கி இருக்கிறது.

பாஜக மகிழ்ச்சி
ரஜினியின் அரசியல் அறிவிப்பை அவரது ரசிகர்களை விட அதிகம் கொண்டாடியது பாஜக கட்சிதான். முதல் ஆளாக தமிழிசை சவுந்தரராஜன் ரஜினிக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் ரஜினி ஆன்மீக அரசியல் தமிழ்நாட்டில் இருக்கும் நாத்திக அரசியலுக்கு முடிவு கட்டும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இந்தியா முழுக்க இருக்கும் பாஜக கட்சி அவரது அறிவிப்பை வரவேற்றது.

கர்நாடகா
கர்நாடகாவிலும் அவரது அறிவிப்பிற்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. கர்நாடக முன்னாள் அமைச்சரும், பாஜக முக்கிய நிர்வாகியுமான சி. டி. ரவி இது குறித்து பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் ''பாஜக கட்சி எப்போதும் ரஜினியுடன் நெருக்கமாகவே இருந்து வருகிறது. அவரை நாங்கள் எப்போதும் ஆதரித்து வருகிறோம். நாங்கள் அரசியலில் யாரையும் ஒதுக்கி வைக்க விரும்பவில்லை. எங்களுடன் சேர விரும்பும் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் கர்நாடக தேர்தலில் ரஜினியை பிரச்சாரம் செய்ய வைக்கவும் திட்டமிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மண்ணின் மைந்தர்
இதேபோல் ரஜினியின் சகோதரர் சத்யா நாராயண ராவ் கோவிந்த் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ''ரஜினிக்கு எப்போது தன்னுடைய பிறந்த மாநிலத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஆசை. தமிழக அரசியலுக்குள் வருவதன் மூலம் அவர் தமிழ்நாட்டிற்கும் நல்லது செய்ய முடியும், கர்நாடகாவிற்கும் நல்லது செய்ய முடியும்'' என்று குறியுள்ளார்.

முடிவு செய்வார்
அதேபோல் பாஜகவிற்காக ரஜினி பிரச்சாரம் செய்வாரா என்பது குறித்தும் அவர் பேசினார். அதில் ''ரஜினி இப்போதுதான் அரசியல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். எனவே அவர் இதுகுறித்து புரிந்து கொள்ள சில நாள் ஆகும். அதுவரை அவர் பிரச்சாரம் செய்வாரா என்று சொல்ல முடியாது. இதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
-
உடல்நிலை சரியில்லை என்று அரசியலுக்கு வராமல் தப்பினார்! ரஜினி பற்றி ப்ளூ சட்டை மாறன் பதிலடி! அடுத்த பஞ்சாயத்து -
ஆதவ் அர்ஜுனாவை பங்கம் செய்த அர்ஜுன மூர்த்தி.. ரஜினிகாந்த் குறித்து விஜய்க்கு பகிரங்க கடிதம் -
“ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்த கூடாது..” ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு திருமாவளவன் பதிலடி! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications