2 ஆண்டுகளில் இரு பெரும் சிந்தனையாளர்கள் படுகொலை.. என்ன நடக்கிறது கர்நாடகத்தில்?
கர்நாடகத்தில் கௌரி லங்கேஷ், எம்எம் கல்புர்கி ஆகிய இரண்டு அறிவுஜீவிகள் இரண்டாண்டு இடைவெளியில் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிந்தனையாளர் எம்.எம்.கல்புர்கி, அவரைத் தொடர்ந்து மூத்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் இருவரும் இரண்டாண்டு கால இடைவெளியில் கொல்லப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் இந்துத்துவ கொள்கைகளை எதிர்த்து தன்னுடைய 'லங்கேஷ் பத்திரிகே' வார இதழில் தொடர்ந்து எழுதி வந்தார். அதனால் அவருக்கு வலதுசாரி இயக்கங்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்தது. இந்நிலையில் அவர் நேற்று கொடூரமாகக் கொல்லப்பட்டார். மூன்றுமுறை அவர் மீது குண்டு பாய்ந்துள்ளது.
கௌரி, தன்னுடைய பத்திரிகையில் கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் பிரஹலாத் ஜோஷி, உமேஷ், சிவானந்த் பட் ஆகியோருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டைக் கூறினார்.

அவமதிப்பு வழக்கில் கைது
இதனால் அவர் மேல் அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டு அவருக்கு, 2016ஆம் ஆண்டு ஆறுமாத சிறை தண்டனை வழங்கப்பட்டு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

உயிருக்கு ஆபத்து
அப்போதே அவர் வலதுசாரிகளால் தன் உயிருக்கு ஆபத்து உள்ளது எனக் குறிப்பிட்டார். இந்த நிலையில் தான், அவர் நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்புர்கி கொலை போலவே
அதேபோல், 2015ஆம் ஆண்டு, கன்னட எழுத்தாளும் ஆய்வறிஞருமான எம்.எம்.கல்புர்கி, ஆகஸ்டு 30ஆம் தேதி நெற்றியில் கொடூரமாகச் சுடப்பட்டு இறந்தார். இவர் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த காரணத்தால் அவரை கௌரியை கொன்றது போல் அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்றனர்.

என்ன காரணம்
கர்நாடக மாநிலத்தில் இரண்டாண்டு கல இடைவெளியில், இரண்டு அறிவுஜீவிகள் மீது படுகொலை நிகழ்த்தப்பட்டிருப்பது மொத்த இந்தியாவையும் அசைத்துள்ளது. இவர்கள் மட்டுமில்லாது மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த கோவிந்த பன்சாரே, நரேந்திர தபோல்கர் ஆகிய இருவரும் இதே காரணங்களுக்காக சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications