கட்ஜூ குறிப்பிடுவது மறைந்த நீதிபதி அசோக்குமார்தான்.. ஆனால் உண்மை இல்லை: கே.ஜி. பாலகிருஷ்ணன்!
டெல்லி: ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நீதிபதியை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்ததில் அரசியல் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து செயல்பட்டதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அடிப்படை ஆதாரமற்றது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவரான மார்க்கண்டேய கட்ஜூ தமது இணைய பக்கத்தில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக பரபரப்பான புகார்களைத் தெரிவித்துள்ளார். அதில் 10 ஆண்டுகளுக்கு ஊழல் நீதிபதி ஒருவரை கூடுதல் நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்பதற்காக பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கை திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் மிரட்டியதாகவும் கூறி இருந்தார்.
இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. இது பற்றி முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலும் அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
நீதிபதி அசோக்குமாரைத்தான்... கே.ஜி. பாலகிருஷ்ணன் விளக்கம்
இந்த நிலையில் மார்கண்டே கட்ஜூவின் கருத்துகள் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்து கூறியுள்ளதாவது:
மார்க்கண்டேய கட்ஜூ கூறிய குற்றச்சாட்டு அடிப்படை அற்றது. அதில் உண்மை இல்லை. அரசியல் நிர்பந்தத்திற்கு உட்பட்டு நீதிபதியை நியமனம் செய்ததாக அவர் கூறியிருப்பது தவறு. அவர் சொல்வது மறைந்த நீதிபதி அசோக்குமாரைத்தான்.
10 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்த குற்றச்சாட்டை கூறுவது ஏன்? குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் தற்போது உயிருடன் இல்லாத நிலையில் இதுபோன்ற குற்றச்சாட்டை கூறுவது நியாயம் அல்ல.
மத்திய புலனாய்வுத் துறை சம்மந்தப்பட்ட நீதிபதி குறித்து அனுப்பிய அறிக்கை எனக்கு தெரியாது. அவரை ஆந்திர உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்வது சரியானது என்று நினைத்ததாலேயே நாங்கள் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டோம்.
இது மட்டுமே உண்மை நிலவரம் ஆகும். இதன் பின்னணியில் எந்த அரசியல் நிர்பந்தமோ அல்லது ஊழலோ இல்லை. இவ்வாறு முன்னாள் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications