மின்சாரம் தராமல் ஏமாற்றுவதா? சந்திரபாபு நாயுடு மீது வழக்கு தொடருவேன்: சந்திரசேகர ராவ்
ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு தரவேண்டிய மின்சாரத்தை தர மறுக்கும் சந்திரபாபு நாயுடு மீது வழக்கு தொடருவேன் என்று சந்திரசேகர ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெலுங்கானாவில் உள்ள ஸ்ரீசைலம் அணையில் மின்சார உற்பத்திக்காக அம்மாநில அரசு தண்ணீர் திறந்து விடுகிறது. இதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்தார்.

ஸ்ரீசைலம் அணை தண்ணீரை தெலுங்கானா அரசு வீணாக்குவதால் ராயலசீமா பகுதி வறட்சியை சந்திக்கும் நிலை ஏற்படும். அதனால் தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும் என்று மத்திய நீர்ப்பாசன தீர்ப்பாயத்துக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் அலுவலகத்தை டி.ஆர்.எஸ். கட்சியினர் அடித்து நொறுக்கி தீ வைத்தனர்.
இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''ஆந்திர மறு சீரமைப்பு சட்டத்தை சந்திரபாபு நாயுடு மீறி வருகிறார். தெலுங்கானாவை பிடித்த சைத்தானாக அவர் இருக்கிறார். ஸ்ரீசைலம், கிருஷ்ண பட்டினம் போன்றவை சந்திரபாபு நாயுடுவின் சொத்து அல்ல.
ஆந்திர சீரமைப்பு சட்டப்படி தெலுங்கானாவுக்கு தரவேண்டிய மின்சாரத்தை சந்திரபாபு நாயுடு தரவில்லை. இது சம்பந்தமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இதுதொடர்பாக, அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். தெலங்கானாவுக்கு வரவேண்டியதை வசூலிக்காமல் விடமாட்டேன்.
ஸ்ரீசைலம் அணையில் இருந்து மின்சாரம் உற்பத்தியை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை. 234 அடி தண்ணீர் இருக்கும் வரை மின்சாரம் உற்பத்தி செய்வோம். சந்திரபாபு நாயுடு தெலங்கானாவுக்கு 53.89 சதவீதம் மின்சாரம் தரவேண்டும். ஆனால் தரவில்லை. இது சம்பந்தமாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளேன். இந்த விவகாரத்தில் பிரதமர் வேடிக்கை பார்க்க கூடாது" என்றும் சந்திரசேகர்ராவ் கூறியுள்ளார்.
-
தூத்துக்குடிக்கு வர இருந்த கப்பல் முதலீடு! கண்டுக்காத தமிழக அரசால்..ஆந்திரா போன மசகான் டாக் நிறுவனம் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications