அம்மா, இன்று நியூஸ் சேனலை பாருங்க: கெஜ்ரிவால் மீது மை வீசும் முன்பு தாயிடம் தெரிவித்த பாவனா
டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது மை வீசும் முன்பு இன்று செய்தி சேனலை பார்க்குமாறு பாவனா அரோரா தனது தாயிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த பாவனா அரோரா(28) என்ற பட்டதாரி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மை வீசியதற்காக கைது செய்யப்பட்டார். ராமா விஹாரில் உள்ள ரோஹினி செக்டார் 39ல் பெற்றோர், சகோதர, சகோதரிகளுடன் வசித்து வரும் பாவனா ஆம் ஆத்மி சேனா உறுப்பினர் ஆவார்.

இந்நிலையில் மை வீச்சு சம்பவம் பற்றி பாவனாவின் தாய் லட்சுமி தேவி கூறுகையில்,
நான் கிளம்புகிறேன். இன்று செய்தி சேனலை கண்டிப்பாக பார்க்கவும் என்று கூறிவிட்டு பாவனா சென்றார். ஆனால் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை என்னிடம் தெரிவிக்கவில்லை என்றார்.
பாவனாவின் தம்பி புனீத் அரோரா(26) கூறுகையில்,
என் அக்கா ஒரு சமூக ஆர்வலர். யாருக்காவது அநீதி நடந்தால் அவரால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. அவர் கல்லூரியில் படிக்கையில் அன்னா ஹஸாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார்.
அவர் ஆம் ஆத்மி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் ஆம் ஆத்மி சேனாவில் சேர்ந்தார். கட்சியில் அவர் செய்வது பற்றி அவரும் கூறியது இல்லை, நாங்களும் கேட்டது இல்லை. அவர் எந்த தவறும் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கை தான்.
என் அக்காவுக்காக போராடுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications