கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய தயார்... மனசாட்சிப் படி நடப்பேன் என ஷீலா தீட்சித் அறிவிப்பு
திருவனந்தபுரம்: கவர்னர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும், நெருக்கடிகளுக்கு பயப்படாமல் மனசாட்சிப் படி முடிவு எடுப்பேன் எனவும் கேரள கவர்னர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. புதிய ஆட்சி அமைக்கப்பட்டவுடன், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பதவியில் அமர்த்தப்பட்ட கவர்னர்களை மாற்றும் நடவடிக்கைகளில் இறங்கியது பாஜக.

இதனால் சில மாநில கவர்னர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். சில கவர்னர்கள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டனர். இந்தப்பட்டியலில், கேரள கவர்னராக டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்து உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நம்பிக்கைக்கு உரியவரான ஷீலா தீட்சித் கேரள கவர்னர் பதவியில் இருந்து நாகலாந்துக்கு மாற்றப்படலாம் அல்லது அவர் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப் படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்கிடையே கடந்த வாரம் டெல்லி சென்ற ஷீலா தீட்சித் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஷீலா தீட்சித் கூறினாலும், அவர் எந்த நேரத்திலும் ராஜினாமா செய்யலாம் என்ற பரபரப்பு மேலும் அதிகமானது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் கவர்னர் ஷீலா தீட்சித்தும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்கள் மத்தியில் ஷீலா தீட்சித் கூறியதாவது :-
கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய நான் தயாராக உள்ளேன். அதே சமயம் எந்த விதமான நெருக்கடிக்கும் நான் பணிய மாட்டேன். மத்திய அரசிடம் இருந்து கவர்னர் பதவியை ராஜினாமா செய்யும்படி அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் எனது மனசாட்சிப்படி முடிவு எடுப்பேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? சென்னையில் உறுதி கொடுத்த பிரதமர் மோடி.. பாஜக மேலிடம் எடுத்த முடிவு! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications