பணமதிப்பிழப்புக்கு எதிர்ப்பு.. ரிசர்வ் வங்கி நோக்கி இடதுசாரி கட்சியினர் பேரணி
Recommended Video
டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணி நடத்தினர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், காங்கிரஸ் கூட்டணியிலுள்ள எதிர்க்கட்சிகள், இதை கறுப்பு தினமாக அனுசரித்து வருகின்றன.
Left Parties Protest march against Demonitisation from Mandi House to @RBI @cpimspeak pic.twitter.com/mSoKbi0kMa
— Bijendra Singh (@bijendrasingh) November 8, 2017
தமிழகத்திலும் திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள், இதை கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றன. இந்த நிலையில், டெல்லியில், இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மண்டி ஹவுஸ் பகுதியிலிருந்து ரிசர்வ் வங்கி வரை ஊர்வலமாக சென்றனர்.
அப்போது மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளையும், பேனர்களையும் அவர்கள் கொண்டு சென்றனர்.