'நோ' ரயில்வே பட்ஜெட்...ரயில்கள் இயக்க, பராமரிக்க தனியார்மயம்... அதிர வைக்கும் புதிய பரிந்துரைகள்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பயணிகள் ரயில்களை இயக்க தனியாருக்கு பரிந்துரை அளிக்க வேண்டும்; ரயில்வே பட்ஜெட் என தனியாக தேவையில்லை என்று மத்திய அரசுக்கு பொருளாதார வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

ரயில்வே துறையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய திட்ட குழுவுக்கு மாற்று அமைப்பான நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் டெப்ராய் தலைமையில் 8 பேர் கொண்ட குழு கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசால் அமைக்கப்பட்டது.
இக்குழு தமது பரிந்துரையை மத்திய அரசிடம் அளிக்க இருக்கிறது. இதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முக்கிய அம்சங்கள்:
- பயணிகள் ரயில்களை இயக்கவும், பராமரிக்கவும் தனியாருக்கு அனுமதி வழங்க வேண்டும்
- ரயில் பெட்டிகள், என்ஜின்கள் போன்றவற்றை தயாரிக்கும் பணிகளிலும் தனியாரை அனுமதிக்கலாம்.
- ரயில்களில் உணவு பொருட்கள் விற்பனைக்கு தனியாருக்கு உரிமம் வழங்கலாம்
- சரக்குகளை கையாளுவதற்கான ரயில் பெட்டிகளை குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாம்.
- ரயில்வே துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
- ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீட்டை பொது பட்ஜெட்டில் இடம்பெறச் செய்யலாம்.
- ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே மருத்துவமனைகள், ரயில்வே பள்ளிகள் போன்றவற்றின் நிர்வாகம் ரயில்வே துறையில் இருந்து பிரிக்க வேண்டும்
- ரயில்வே மண்டல பொது மேலாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும்.
- என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் அளிக்கப்பட இருக்கிறது. ரயில்வே துறையில் தனியாரை களமிறக்கும் இந்த பரிந்துரைகள் தொழிற்சங்கங்களிடம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications