லைபீரிய அதிபருக்கு இந்திரா காந்தி அமைதி பரிசு
டெல்லி: 2012ம் ஆண்டுக்கான இந்திராகாந்தி அமைதிப்பரிசு லைபீரிய அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகில் அமைதி வழியை பின்பற்றி சமூக சேவையில் ஈடுபட்டு வரும் தலைவர்களுக்கு இந்திர காந்தி அமைதி பரிசு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதி பரிசு வழங்கும் விழா இன்று டெல்லியில் நடந்தது.
இதில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அமைதி பேச்சுவார்த்தையில் பெண்கள் கலந்துகொள்ளும் உரிமை ஆகியவற்றிற்காக அமைதி வழியில் போராடிய லைபீரிய அதிபர் எலென் ஜான்சன் சர்லீப்புக்கு ஜனாதிபதி பிராணப் முகர்ஜி இந்திர காந்தி அமைதி பரிசை வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சமூக சீர்திருத்தம் குறித்து பல்வேறு புத்தகங்கள் எழுதியுள்ள அதிபர் எலென் ஜானின் சமூக சேவையை பாராட்டி 2011 ஆம் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications