மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்த குஜராத் பாஜக வேட்பாளர்!
அகமதாபாத்: லோக்சபா தேர்தலில் மிக அதிகளவாக, 6.9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளார் குஜராத் நவ்சாரி லோக்சபா தொகுதி வேட்பாளர் சி.ஆர். பட்டீல்.
லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். காந்திநகர் தொகுதியில் பாஜக தலைவர் அமித்ஷா, 5.57 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
இவர்கள் வரிசையில் தெற்கு குஜராத்தின் நவ்சாரி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.ஆர். பட்டீல் 6.9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளார். தற்போதைய தேர்தலில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் பட்டீல்தான்.
வாரணாசியில் மோடி.. அமோக வரவேற்பு! காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அமித்ஷா, ஆதித்யநாத்துடன் சிறப்பு வழிபாடு
இந்திய தேர்தல் வரலாற்றில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் 2014 இடைத்தேர்தலில் பீட் தொகுதியில் கோபிநாத் முண்டேவின் மகன் ப்ரீத்தம் முண்டே 9.96 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தார்.