தூய்மை இந்தியா திட்டத்தின் மீது ஈர்ப்பு... மகளுக்கு ‘தூய்மை’ எனப் பேர் வைத்து மஹா. பெற்றோர் அசத்தல்!
மஹாராஷ்டிராவில் பெண் குழந்தைக்கு தூய்மை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மும்பை: மஹாராஷ்டிராவில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தால் ஈர்க்கப்பட்ட பெற்றோர் தங்கள் குழந்தைக்கு தூய்மை எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
2019ஆம் ஆண்டு தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது கனவினை நனவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை துவக்கி வைத்தது. பிரதமர் மோடி இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
நாடு முழுவதும் தூய்மை இந்தியா இயக்கம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது நாட்டை தூய்மையாகவும், சுகாதாரமானதாகவும் மாற்ற வேண்டும் என விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த தூய்மை இந்தியா திட்டத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பெற்றோர் தங்களது குழந்தைக்கு “ஸ்வச்சத்தா’ (தூய்மை) எனப் பெயரிட்டுள்ளனர்.
லத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெற்றோரின் பெயர் மோகன் குரில் - காஜல் ஆகும். இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி அழகிய பெண் குழந்தைப் பிறந்தது. அக்குழந்தைக்கு நேற்று முன்தினம் பேர் சூட்டும் விழா நடைபெற்றது.
மோகனும், காஜலும் தூய்மை இந்தியா திட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டு செயல்பட்டு வருபவர்கள். எனவே, தங்களது மகளுக்கு அவர்கள் தூய்மை எனப் பொருள் படும் வகையில், 'ஸ்வச்சத்தா’ எனப் பெயரிட்டுள்ளனர்.
இந்தப் பேர் சூட்டும் விழாவில் கலந்து கொண்டவர்கள் மகளுக்கு தூய்மை எனப் பெயரிட்ட மோகன் - காஜல் தம்பதிக்கு தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications