For Daily Alerts
Just In
பாஜகவின் முடிவுக்கான ஆரம்பம் இது.. உ.பி இடைத்தேர்தல் குறித்து மமதா பானர்ஜி அதிரடி
Recommended Video
கோரக்பூர் தொகுதியில் பாஜக தோல்வி முகம்..வீடியோ
லக்னோ: உத்தர பிரதேச மாநில லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து மமதா பானர்ஜி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் பணி தற்போதுமுடிய போகிறது. முதலில் பாஜக முன்னிலை வகித்தது.
ஆனால் இப்போது இரண்டு தொகுதியிலும் சமாஜ்வாதி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இதில் சமாஜ்வாதி- பகுஜன் சமாஜ் கூட்டணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில் இந்த கூட்டணி வெற்றி குறித்து மேற்கு வாங்க முதல்வர் மமதா பானர்ஜி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் ''உ.பி இடைத்தேர்தலில் அகிலேஷ் - மாயாவதி கூட்டணிக்கு சிறந்த வெற்றி கிடைத்து இருக்கிறது.
பாஜக கட்சியின் முடிவுக்கான ஆரம்பம் இதுதான். '' என்று தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Bypoll for two Gorakhpur and Phulpur Lok Sabha seats held in Uttar Pradesh. The Bharatiya Janata Party (BJP) has fielded former mayor of Varanasi, Kaushlendra Singh Patel as its candidate from Phulpur while Upendra Shukla would contest from Gorakhpur. Counting started for bypoll in Gorakhpur and Phulpur Lok Sabha seats in UP.Mamata Banerjee wishes SP-BSP for bypoll win in UP
Story first published: Wednesday, March 14, 2018, 14:53 [IST]