பணத் தட்டுப்பாடு... ஒரே ஒரு ஆளுக்காக படம் காட்டிய தியேட்டர் உரிமையாளர்!
அகமதாபாத்: அகமதாபாதில் தனி நபர் ஒருவருக்காக ஒரு சினிமா காட்சியை திரையிட்டுள்ளனர்.
ரூ 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளதையடுத்து அந்த பணத்தை மாற்றவும் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் மக்கள் அலைமோதிக் கொண்டிருக்கிறார்ம்கள்.

இந்த சூழலில்தான் அகமதாபாத்தில் ஒருவர் தனி ஒரு ஆளாக திரையரங்கில் அமர்ந்து படம் பார்த்துள்ளார்.
தனி நபருக்காக படம் காண்பித்த தியேட்டர் உரிமையாளர் ராகேஷ் பட்டேல் இது குறித்து கூறுகையில், "பணம் பற்றாக்குறையால் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது.
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளதால் சினிமா டிக்கெட் விற்பனை குறைந்துள்ளது. இதனால் எங்களது வியபாரம் பாதிக்கப்பட்கிடுள்ளது என்னவோ உண்மைதான். ஆனாலும் அரசின் முயற்சிக்கு ஆதரவாகவே உள்ளோம்," அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications