ஈராக்கில் தவிக்கும் இந்தியர்களை மீட்க வளைகுடா நாடுகளின் தூதர்களுடன் சுஷ்மா ஆலோசனை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஈராக்கில் தவித்து வரும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து 6 வளைகுடா நாடுகளின் தூதர்களுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆலோசனை நடத்தினார்.

ஈராக்கில் பெரும்பாலான நகரங்களை சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றியுள்ளது. இதனால் அங்கு பணிக்கு சென்ற சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் கதி பெரும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

MEA gears up for Iraq evacuation

இந்த நிலையில் 6 வளைகுடா நாடுகளின் தூதர்களுடன் டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று ஆலோசனை நடத்தினார். குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன். சவூதி அரேபியா தூதர்களும் வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சரான வி.கே.சிங்கும் இந்த ஆலோசனைக் கூடத்தில் கலந்து கொண்டனர்.

இந்தியர்களை எந்த நாட்டின் வழியாக எப்படி வெளியேற்றுவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அத்துடன் மொசூல் நகரில் தீவிரவாதிகள் கடத்தி வைத்துள்ள 39 இந்தியர்களின் குடும்பங்களையும் சுஸ்மா ஸ்வராஜ் சந்தித்து பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+