மண்டோதரி பேச்சைக் கேட்டிருந்தால் ராவணன் இப்படி ஆகியிருப்பானா... ஆர்.எஸ்.எஸ். பகவத் பரபர பேச்சு
போபால்: ராவணன் தனது மனைவி மண்டோதரியின் பேச்சைக் கேட்கவில்லை. கேட்டிருந்தால் இன்று கொடும்பாவியாக கொளுத்தப்படும் நிலை ஏற்பட்டிருக்காது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.
அத்தோடு நில்லாத மோகன் பகவத், ஆண்கள் அனைவரும் மண்டோதரியின் கதையைப் படிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். போபாலில் நடந்த கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹா எழுதிய பரிதாப்த் லங்கேஸ்வரி என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசுகையில் இப்படிக் கூறினார் பகவத்.
நூல் வெளியீட்டு விழாவில், லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் செளகான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அந்த விழாவில் மோகன் பகவத் பேசியதாவது:-

மண்டோதரியைப் பாருங்கள்
ஆண்கள் ராவணனின் மனைவி மண்டோதரி கதையைப் படிக்க வேண்டும். மண்டோதரியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

மண்டோதரி பேச்சைக் கேட்டிருந்தால்
ராவணன் தனது மனைவி பேச்சைக் கேட்கவில்லை. மனைவியை மதிக்கவில்லை. கேட்டிருந்தால், இன்று கொடும்பாவியாக கொளுத்தப்படும் நிலை ஏற்பட்டிருக்காது.

மனைவி பேச்சைக் கேளுங்கள்
எனவே இங்குள்ள ஆண்களுக்கு நான் கூறும் செய்தி, மறவாமல் மண்டோதரி கதையைப் படியுங்கள். மனைவி பேச்சைக் கேளுங்கள். அவர்களை மதியுங்கள் என்பதுதான்' என்றார்.

மனிதாபிமானம் மிக்க மண்டோதரி
சுமித்ரா மகாஜன் பேசுகையில், ‘சீதா மீது மண்டோதரிக்கு அனுதாபம் இருந்தது, இரக்கம் இருந்தது. தனது கணவன் செய்த செயல் தவறு என்று கூறியவள் மண்டோதரி. இது அவரது மனிதாபிமான முகத்தைக் காட்டுகிறது' என்றார்.

ஊர்மிளாவுக்காகப் பரிந்து பேசிய செளகான்
மத்தியப் பிரதேச முதல்வர் செளகான் பேசுகையில், ‘ராமாயாணத்தில் இன்னொரு அறியப்படாத பாத்திரம் உண்டு. அதுதான் லட்சுமணனின் மனைவி ஊர்மிளா. அவரைப் பற்றியும், அவரது தியாகத்தைப் பற்றியும் அதிகம் தெரியாமல் போனது வருத்தத்திற்குரியது' என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications