மம்தாவை சந்தித்தார் முகுல் ராய்.. திரிணாமுல் காங்.கில் சேர்ந்தார்.. மே.வங்கத்தில் உச்சகட்ட திருப்பம்
கொல்கத்தா: பாஜக தேசிய துணை தலைவர் முகுல் ராய், அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை முகுல் ராய் சந்தித்து பேசினார்.
மேற்கு வங்கத்தில் அண்மையில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றிபெற்று ஆட்சியை மூன்றாவது முறையாக தக்க வைத்தது.
தேர்தலுக்கு முன்னதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர்கள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், நிர்வாகிகள் என பல முக்கிய தலைவர்களை பாஜ தன் வசம் இழுத்தது.

பாஜக
ஆனால், தேர்தல் முடிவுகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வந்தது. தேர்தல் தோல்வி அதிருப்தி காரணமாக, பாஜக நிர்வாகிகள் அக்கட்சி தலைமைக்கு எதிராக கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த பலர் மீண்டும் அக்கட்சிக்கே தாவப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

மோடியுடன் சந்திப்பு
இந்த சூழலில் மேற்கு வங்கத்தில் பாஜவில் இருந்து யாரும் விலகி செல்வதை தடுக்கும் விதமாக ஆலோசனை கூட்டம் அண்மையில் நடந்தது. ஆனால், திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முக்கிய தலைவர்களான சுவேந்து அதிகாரி, முகுல் ராய் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சுவேந்தி அதிகாரி டெல்லியில் சென்று இருந்ததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்த சுவேந்து அதிகாரி, பிரதமர் மோடியையும் சந்தித்து மேற்கு வங்க அரசியல் குறித்து விவரித்தார்.

மறுக்கவில்லை
இந்நிலையில் முகுல் ராய் மனைவி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரால் பாஜக கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டது. ஆனா முகுல்ராய் பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளார் என்றும் அதனால் தான் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் செய்திகள் வெளியாயின. இந்த செய்தியை முகுல்ராய் மறுக்கவோ, ஆதரிக்கவோ இல்லை.

சற்று நேரத்தில் சந்திப்பு
உச்சகட்ட திருப்பமாக முகுல் ராய் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேரப்போவது உறுதி என்று செய்திகள் வெளியாகின. இதை உறுதிபடுத்தும் விதமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை முகுல் ராய் சந்தித்து திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்துள்ளார்,. இன்றும் நிறைய பேர் வருவார்கள் என்று முகுல்ராய் கூறினார். இந்த சூழலில், மேலும் பல பாஜ எம்எல்ஏ.க்கள் திரிணாமுல் தலைமையைத் தொடர்பு கொண்டு, மீண்டும் கட்சிக்கு திரும்ப தயாராக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இதனால் பாஜக அதிர்ச்சியுடன் கட்சியனரை சமாதானம் செய்ய முயற்சித்து வருகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications