மம்தாவை சந்தித்தார் முகுல் ராய்.. திரிணாமுல் காங்.கில் சேர்ந்தார்.. மே.வங்கத்தில் உச்சகட்ட திருப்பம்
கொல்கத்தா: பாஜக தேசிய துணை தலைவர் முகுல் ராய், அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை முகுல் ராய் சந்தித்து பேசினார்.
மேற்கு வங்கத்தில் அண்மையில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றிபெற்று ஆட்சியை மூன்றாவது முறையாக தக்க வைத்தது.
தேர்தலுக்கு முன்னதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அமைச்சர்கள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், நிர்வாகிகள் என பல முக்கிய தலைவர்களை பாஜ தன் வசம் இழுத்தது.

பாஜக
ஆனால், தேர்தல் முடிவுகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக வந்தது. தேர்தல் தோல்வி அதிருப்தி காரணமாக, பாஜக நிர்வாகிகள் அக்கட்சி தலைமைக்கு எதிராக கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த பலர் மீண்டும் அக்கட்சிக்கே தாவப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

மோடியுடன் சந்திப்பு
இந்த சூழலில் மேற்கு வங்கத்தில் பாஜவில் இருந்து யாரும் விலகி செல்வதை தடுக்கும் விதமாக ஆலோசனை கூட்டம் அண்மையில் நடந்தது. ஆனால், திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முக்கிய தலைவர்களான சுவேந்து அதிகாரி, முகுல் ராய் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சுவேந்தி அதிகாரி டெல்லியில் சென்று இருந்ததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்த சுவேந்து அதிகாரி, பிரதமர் மோடியையும் சந்தித்து மேற்கு வங்க அரசியல் குறித்து விவரித்தார்.

மறுக்கவில்லை
இந்நிலையில் முகுல் ராய் மனைவி உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரால் பாஜக கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டது. ஆனா முகுல்ராய் பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளார் என்றும் அதனால் தான் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் செய்திகள் வெளியாயின. இந்த செய்தியை முகுல்ராய் மறுக்கவோ, ஆதரிக்கவோ இல்லை.

சற்று நேரத்தில் சந்திப்பு
உச்சகட்ட திருப்பமாக முகுல் ராய் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேரப்போவது உறுதி என்று செய்திகள் வெளியாகின. இதை உறுதிபடுத்தும் விதமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை முகுல் ராய் சந்தித்து திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்துள்ளார்,. இன்றும் நிறைய பேர் வருவார்கள் என்று முகுல்ராய் கூறினார். இந்த சூழலில், மேலும் பல பாஜ எம்எல்ஏ.க்கள் திரிணாமுல் தலைமையைத் தொடர்பு கொண்டு, மீண்டும் கட்சிக்கு திரும்ப தயாராக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். இதனால் பாஜக அதிர்ச்சியுடன் கட்சியனரை சமாதானம் செய்ய முயற்சித்து வருகிறது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications