என்னய்யா சொல்கிறீர்கள்...நாட்டில் கொலைகள் குறைஞ்சுருச்சா?
டெல்லி: இந்தியாவில் கடந்த 1960களை விட தற்போது கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
தேசிய குற்றவியல் விசாரணை அமைப்பின் ஆண்டு விவர வெளியீட்டில், இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,2014 ஆம் ஆண்டினைப் பொறுத்த வரையில் நாட்டில் 33,981 கொலைகளும், 3,332 கொலைக்கு உடந்தையாக இருந்த வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த இரண்டு குற்றங்களும் இணைந்து 2014 ஆம் ஆண்டிற்கு 3.0% மக்கள் தொகை அளவிற்கு மட்டுமே பதிவாகியுள்ளன. முந்தைய வருடங்களில் 2.98ஆக உள்ளது.

குறையும் கொலைக்குற்றங்கள்:
மிகக் குறைந்த அளவாக 1970 ஆம் ஆண்டில் 16180 கொலைக் குற்றங்களும், 2,357 கொலைக்கு உடந்தை குற்றங்களும் பதிவாகியுள்ளன. 60 களில் அதிகமாகிய இந்த குற்றங்கள் 1992ல் அதிகரித்து காணப்பட்டுள்ளன.

1992ல் அதிகமாம்:
1992ல் கிட்டதட்ட 5.15 சதவீதமாக இருந்துள்ளது. அது 1957 ஆம் வருடத்தினை விட இரண்டு மடங்காகும். எனினும், 1992 க்கு பின்னர் இந்த கொலைக் குற்ற அளவுகள் குறைய ஆரம்பித்துள்ளது.

மாநிலங்களில் குறைவு:
ஆந்திரா, தெலுங்கானா, ஜார்க்கண்ட், உத்திர பிரதேசம், உத்திர காண்ட், மத்திய பிரதேசம், சட்டீஸ்கரிலும் 1992 ஆம் ஆண்டினை விட 2014 ஆம் ஆண்டில் குற்ற அளவு பெரிதளவில் குறைந்துள்ளது.

உண்மையிலேயே மகிழ்ச்சிதான்:
கடந்த இரு நூற்றாண்டுகளில், நாட்டில் எல்லா மாநிலங்களிலும் மக்கள் தொகை பல கோடியாக அதிகரித்துள்ளது. எனினும், கொலைக் குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது.

ஏன் அதிகரித்தது.. ஏன் குறைந்தது
எனினும், 1992களில் ஏன் கொலைகள் அதிகரித்தது, பின்னர் ஏன் குறைந்துள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளதாக இந்த ஆய்வு கூறியுள்ளது. ஆனாலும், கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளது பெரும் மகிழ்ச்சியினை தருவதாக உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications