முத்துகிருஷ்ணன் உடல் இரவு சென்னை வருகிறது.. சென்னை டூ சேலம், தமிழக அரசு வாகன ஏற்பாடு
டெல்லி ஜெஎன்யுவில் உயிரிழந்த சேலத்தை சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் இன்று இரவு சென்னை கொண்டு வரப்படுகிறது.
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் உயிரிழந்த தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணனின் உடல் இன்று இரவு சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. சென்னையில் இருந்து முத்துக்கிருஷ்ணனின் சொந்த ஊரான பெரியேரிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்பு படித்து வந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன். சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்தைச் சேர்ந்த இவர் கடந்த திங்கட்கிழமை இரவு தனது நண்பரின் அறையில் தூக்கியில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
முத்துக்கிருஷ்ணனின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.

இன்று பிரேத பரிசோதனை
முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவர்கள் 5 பேர் மற்றும் முத்துக்கிருஷ்ணனின் தந்தை தரப்பு மருத்துவரும் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர்.

உடலில் காயங்கள் இல்லை-தற்கொலையே
அப்போது முத்துக்கிருஷ்ணன் மரணம் தற்கொலையே என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.முத்துக்கிருஷ்ணன் உடலில் எந்தவித காயங்களும் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறினர். எந்த சூழலில் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் பிரேத பரசோதனை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
இதைத்தொடர்ந்து முத்துக்கிருஷ்ணனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும் முத்துக்கிருஷ்ணனின் உடல் விமானம் மூலம் இன்று இரவு சென்னை கொண்டு வரப்படுகிறது.

தமிழக அரசு ஏற்பாடு
பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து முத்துக்கிருஷ்ணனின் உடல் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்துக்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துவருவதாக கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications