கர்நாடகாவை கன்னடர்களே ஆள வேண்டும் என நான் சொல்லவே இல்லை... நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம்
கர்நாடகாவை கன்னடர்கள் தான் ஆள வேண்டும் என கூறியதாக வெளியான தகவலுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Recommended Video

பெங்களூரு: கர்நாடகாவை கன்னடர்கள் தான் ஆள வேண்டும் என கூறியதாக வெளியான தகவலுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபகாலமாக மத்திய அரசுக்கு எதிராக தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.
பத்தரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை, தாஜ்மஹால் உத்தரப்பிரதேச சுற்றுலாப் பட்டியலில் இருந்து நீக்கம் உள்ளிட்ட விவகாரங்களின் போதும் அரசை கடுமையாக விமர்சித்தார்.

கன்னடர்கள்தான் ஆளவேண்டும்
இந்நிலையில் பெங்களூரு பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என கூறியதாக தகவல் வெளியானது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

தகுதி உள்ள ஒரு நபர்
தனது கருத்து குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் டிவிட்டரில் விளக்கம் அளித்தார். அதாவது தகுதி வாய்ந்த ஒருவர் நாட்டின் எந்த மாநிலத்திற்கும் தலைவராகலாம் என்பதே ஒரு இந்தியனாக தனது நிலைப்பாடு என நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்தார்.

வகுப்புவாத அரசியல்..
கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்பட எந்த மாநிலமாக இருந்தாலும் மிகவும் மோசமான பிரித்தாளும் மற்றும் வகுப்புவாத அரசியல்வாதிகளை வரும் தேர்தல்களில் வெற்றி பெற விடமாட்டோம் என்றே பெங்களூருவில் கூறினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

திரித்து பிரசாரம்
தன்னுடைய பேச்சை திரித்து பிரசாரம் செய்து தனக்கெதிராக வெறுப்புணர்வை தூண்டுவதன் மூலம் பயம் மற்றும் விரக்தி மனநிலையையே உறுதிப்படுத்துகிறீர்கள் என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications