அவதூறாக பேசியதாக... மோடி மீது தேர்தல் ஆணையத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி புகார்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, நடத்தை விதிகளை மீறி அவதூறாக பேசியதாக பிரதமர் நரேந்திரமோடி மீது தேசிய மாநாட்டுக் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபைக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 25-ந்தேதி நடைபெற்றது. நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது.
இங்கு நேற்று மாலையுடன் முடிவடைந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், உதம்பூர், பூஞ்ச் நகரங்களில் மோடி பிரச்சாரம் செய்தபோது, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்ததாக அக்கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்தவாறு தொலைபேசி மூலமாக பகல்கா மாவட்டம், அகால்டாவில் கூடியிருந்த மக்களிடையே பிரச்சாரம் செய்ததாகவும், இதற்கு அரசுக்கு சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தேசிய மாநாட்டுக் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளது.
-
நெல் சாகுபடி வரலாறு காணாத உயர்வு.. கொள்முதலை ‘டபுள்’ மடங்கு ஆக்கக் கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications