பதன்கோட் தீவிரவாத தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரிக்கும்
டெல்லி: பதன்கோட் தீவிரவாத தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த உள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்திற்குள் சனிக்கிழமை அதிகாலை புகுந்த 5 தீவிரவாதிகள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிளால் கண்மூடித்தனமாக சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டனர்.
சுமார் 5 மணிநேரம் நடந்த இந்த தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். இந்நிலையில் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாதுகாப்பு படையைச் சேர்ந்த 4 பேர் இன்று சிகிச்சை பலனில்லாமல் உயிர் இழந்தனர்.

சம்பவ இடத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். இந்நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த உள்ளது. இந்த விசாரணையில் பஞ்சாப் போலீசார் மற்றும் மத்திய உளவுத் துறையின் உதவியை தேசிய புலனாய்வு ஏஜென்சி நாட உள்ளது.
உத்தம்பூர் தீவிரவாத தாக்குதலைப் போன்று தான் பதன்கோட்டிலும் நடந்துள்ளது. அதனால் உத்தம்பூர் தாக்குதல் பற்றி விசாரிக்கும் தேசிய புலனாய்வு ஏஜென்சி பதன்கோட் தாக்குதல் குறித்தும் விசாரிப்பது சரியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
குர்தாஸ்பூர் தாக்குதல் குறித்து விசாரித்து வரும் பஞ்சாப் போலீசாரிடம் இருந்து சில தகவல்கள் பெறப்படும் என தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
உத்தம்பூரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் போலீசாரிடம் சிக்கிய முகமது நவீதிடம் விசாரிக்கப்படும். அவரிடம் இருந்து சில தகவல்களை பெறலாம். அவரும் பாகிஸ்தானின் பவால்பூரில் இருந்து தான் வந்துள்ளார் என்றார்.
குர்தாஸ்பூரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எந்த வழியாக ஊடுருவினார்கள் என்பது இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications