பதன்கோட் தீவிரவாத தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரிக்கும்
டெல்லி: பதன்கோட் தீவிரவாத தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த உள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள விமானப்படை தளத்திற்குள் சனிக்கிழமை அதிகாலை புகுந்த 5 தீவிரவாதிகள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிளால் கண்மூடித்தனமாக சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டனர்.
சுமார் 5 மணிநேரம் நடந்த இந்த தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். இந்நிலையில் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாதுகாப்பு படையைச் சேர்ந்த 4 பேர் இன்று சிகிச்சை பலனில்லாமல் உயிர் இழந்தனர்.

சம்பவ இடத்தை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். இந்நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்த உள்ளது. இந்த விசாரணையில் பஞ்சாப் போலீசார் மற்றும் மத்திய உளவுத் துறையின் உதவியை தேசிய புலனாய்வு ஏஜென்சி நாட உள்ளது.
உத்தம்பூர் தீவிரவாத தாக்குதலைப் போன்று தான் பதன்கோட்டிலும் நடந்துள்ளது. அதனால் உத்தம்பூர் தாக்குதல் பற்றி விசாரிக்கும் தேசிய புலனாய்வு ஏஜென்சி பதன்கோட் தாக்குதல் குறித்தும் விசாரிப்பது சரியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
குர்தாஸ்பூர் தாக்குதல் குறித்து விசாரித்து வரும் பஞ்சாப் போலீசாரிடம் இருந்து சில தகவல்கள் பெறப்படும் என தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
உத்தம்பூரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் போலீசாரிடம் சிக்கிய முகமது நவீதிடம் விசாரிக்கப்படும். அவரிடம் இருந்து சில தகவல்களை பெறலாம். அவரும் பாகிஸ்தானின் பவால்பூரில் இருந்து தான் வந்துள்ளார் என்றார்.
குர்தாஸ்பூரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எந்த வழியாக ஊடுருவினார்கள் என்பது இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications