பெங்களூர்: கழிவு நீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட 9 வயது தமிழக சிறுமி

கீதா என்ற அந்த சிறுமி கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகளாவார். தசரா விடுமுறையை ஒட்டி பெங்களூரின் பிலேஹள்ளி பகுதியில் உள்ள தனது அத்தை தனலட்சுமி என்பவரின் வீட்டிற்கு வந்துள்ளார்.
பெங்களூருவில் பிலேக்ஹள்ளி பகுதியில் நேற்று இரவு பலத்தமழை பெய்துள்ளது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது வீட்டிற்குள் இழுந்து மழையை வேடிக்கை பார்ப்பதற்காக வெளியே வந்த சிறுமி கீதா கால்தவறி 4 அடி ஆழமும் 4 அடி அகலமும் கொண்ட கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்துவிட்டார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தனலட்சுமி உடனடியாக சிறுமியை மீட்க முயற்சி செய்தார். அவரது கையை பிடித்தும், தலைமுடியைப் பிடித்தும் இழுத்தார் ஆனால் அவரால் சிறுமியை முடியவில்லை. அதற்குள் வெள்ளநீர் சிறுமியை இழுத்துச்சென்றுவிட்டது.
இந்த சம்பவம் ஜெயதேவ் மருத்துவமனையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவிலேயே நிகழ்ந்துள்ளது.
உடனடியாக தீயணைப்பு மீட்புத்துறைக்கு போன் செய்தனர். ஜெயநகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து பிலேஹள்ளி பகுதிக்கு தீயணைப்பு வண்டி வருவதற்குள் 8 மணிக்கு மேலாகிவிட்டது. கால்வாய் முழுவதும் தேடிப்பார்த்தும் சிறுமி இருந்த அடையாளமே தெரியவில்லை.
சம்பவ இடத்திற்கு வந்த கவுன்சிலர் ரூபா, கால்வாயில் மூடி சரியாக மூடப்படாத காரணத்தினாலேயே சிறுமி உள்ளே விழுந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த கழிவுநீர் அனைத்தும் மடிவாலா ஏரி பகுதியில் சென்று கலப்பதாக கூறிய அவர், சிறுமியின் உடல் ஒருவேளை அங்கு சென்றிருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து அங்கு வந்த பெங்களூர் மாநகராட்சி கமிஷனர் லட்சுமி நாராயணன், சிறுமியை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
பிலேஹள்ளிப் பகுதியில் நடைபெற்று வரும் கட்டிட கட்டுமானப்பணிகள் காரணமாக கழிவுநீர்கால்வாய்களின் மூடிகளை திறந்து வைத்துவிடுவதாக என்று மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியுள்ளார். குடியிருப்பு வாசிகள் விழிப்புணர்வோடு இருந்திருந்தால் சிறுமி தவறி விழ நேர்ந்திருக்காது என்றும் அவர் கூறினார்.
இதனிடையே விடிய விடிய சிறுமியைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டும் இதுவரை சிறுமியின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. தீயணைப்புத்துறையினர் சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications