பெங்களூர்: கழிவு நீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட 9 வயது தமிழக சிறுமி

கீதா என்ற அந்த சிறுமி கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகளாவார். தசரா விடுமுறையை ஒட்டி பெங்களூரின் பிலேஹள்ளி பகுதியில் உள்ள தனது அத்தை தனலட்சுமி என்பவரின் வீட்டிற்கு வந்துள்ளார்.
பெங்களூருவில் பிலேக்ஹள்ளி பகுதியில் நேற்று இரவு பலத்தமழை பெய்துள்ளது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது வீட்டிற்குள் இழுந்து மழையை வேடிக்கை பார்ப்பதற்காக வெளியே வந்த சிறுமி கீதா கால்தவறி 4 அடி ஆழமும் 4 அடி அகலமும் கொண்ட கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்துவிட்டார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தனலட்சுமி உடனடியாக சிறுமியை மீட்க முயற்சி செய்தார். அவரது கையை பிடித்தும், தலைமுடியைப் பிடித்தும் இழுத்தார் ஆனால் அவரால் சிறுமியை முடியவில்லை. அதற்குள் வெள்ளநீர் சிறுமியை இழுத்துச்சென்றுவிட்டது.
இந்த சம்பவம் ஜெயதேவ் மருத்துவமனையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவிலேயே நிகழ்ந்துள்ளது.
உடனடியாக தீயணைப்பு மீட்புத்துறைக்கு போன் செய்தனர். ஜெயநகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து பிலேஹள்ளி பகுதிக்கு தீயணைப்பு வண்டி வருவதற்குள் 8 மணிக்கு மேலாகிவிட்டது. கால்வாய் முழுவதும் தேடிப்பார்த்தும் சிறுமி இருந்த அடையாளமே தெரியவில்லை.
சம்பவ இடத்திற்கு வந்த கவுன்சிலர் ரூபா, கால்வாயில் மூடி சரியாக மூடப்படாத காரணத்தினாலேயே சிறுமி உள்ளே விழுந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த கழிவுநீர் அனைத்தும் மடிவாலா ஏரி பகுதியில் சென்று கலப்பதாக கூறிய அவர், சிறுமியின் உடல் ஒருவேளை அங்கு சென்றிருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து அங்கு வந்த பெங்களூர் மாநகராட்சி கமிஷனர் லட்சுமி நாராயணன், சிறுமியை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
பிலேஹள்ளிப் பகுதியில் நடைபெற்று வரும் கட்டிட கட்டுமானப்பணிகள் காரணமாக கழிவுநீர்கால்வாய்களின் மூடிகளை திறந்து வைத்துவிடுவதாக என்று மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியுள்ளார். குடியிருப்பு வாசிகள் விழிப்புணர்வோடு இருந்திருந்தால் சிறுமி தவறி விழ நேர்ந்திருக்காது என்றும் அவர் கூறினார்.
இதனிடையே விடிய விடிய சிறுமியைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டும் இதுவரை சிறுமியின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. தீயணைப்புத்துறையினர் சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications