இரட்டை இலைக்கு லஞ்சம்... நேரில் பார்த்த சாட்சியம் வாக்குமூலம்- தினகரனுக்கு ஜாமீன் கிடைக்காது!
இரட்டை இலை சின்னத்துக்கு இடைத்தரகர் சுகேஷ் லஞ்சம் பெற்றதை நேரில் பார்த்த சாட்சி வாக்குமூலம் அளித்துவிட்டதால் இந்த வழக்கில் தினகரனுக்கு ஜாமீன் கிடைக்காது என்று தெரிகிறது.
டெல்லி: இரட்டை இலை சின்னத்துக்கு இடைத்தரகர் சுகேஷ் லஞ்சம் பெற்றதை நேரில் பார்த்த சாட்சி வாக்குமூலம் அளித்துவிட்டதால் இந்த வழக்கில் தினகரனுக்கு ஜாமீன் கிடைக்காது என்று தெரிகிறது.
இரட்டை இலை சின்னத்தை தனக்கே உரிதாக்கி கொள்ள வேண்டும் என்பதற்காக டிடிவி தினகரன், டெல்லி இடைத்தரகர் சுகேஷுக்கு லஞ்சம் அளித்ததாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் தினகரனின் பணப்பரிவர்த்தனை விஷயங்களை கவனித்து வந்த அவரது நண்பர் மல்லிகார்ஜுனனும் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் விசாரணை
தினகரன், மல்லியை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்த டெல்லி போலீஸார் தினகரன் அடிக்கடி செல்லும் இடங்களில் விசாரணை நடத்தினர். மேலும் ஆதம்பாக்கம், கொளப்பாக்கம், திருவேற்காடு, பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தி 16 பேருக்கு சம்மன் அளித்தனர்.

திகார் சிறை
இந்நிலையில் போலீஸ் கஸ்டடிக்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது தினகரனையும், மல்லியையும் திகார் சிறையில் அடைக்க நீதிபதி பூனம் சௌதரி உத்தரவிட்டதை தொடர்ந்து மே 1-ஆம் தேதி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முக்கிய திருப்பம்
டெல்லியில் ஹவாலா ஏஜென்டிடம் இருந்து இடைத்தரகர் சுகேஷ் பணம் பெற்றதை நேரில் பார்த்ததாக திருவேற்காட்டை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் டெல்லி மாஜிஸ்திரேட்டிம் வாக்குமூலம் அளித்தார். மேலும் பணம் பெற்றதும் தமது செல்போனில் இருந்து சென்னை நபரிடம் சுகேஷ் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டெல்லி போலீஸாரால் சம்மன் அனுப்பப்பட்டவர்களில் அவரும் ஒருவர்.

வசமாக சிக்கிய தினகரன்
சிறையில் உள்ள டிடிவி தினகரனின் நீதிமன்றக் காவல் மே 15-ஆம் தேதியும், சுகேஷின் நீதிமன்றக் காவல் மே 12-ஆம் தேதியும் முடிவடைகிறது. முக்கிய சாட்சியம் கிடைத்துள்ளதால் டிடிவி தினகரன், சுகேஷ் ஆகியோரை ஜாமீனில் விட எதிர்ப்பு தெரிவிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மேலும் அவர்களை வெளியே விட்டால் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி சாட்சியங்களை அழித்துவிடுவர் என்ற வாதத்தையும் டெல்லி போலீஸ் முன்வைக்க உள்ளது.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications