சசிகலா சிறை விதிமீறல்... ஆவணங்களை கோர்ட்டில் கொடுப்பேன்... அதிரடியாக சொன்ன டிஐஜி ரூபா!
சிறையில் சசிகலா பெற்ற சலுகைகள் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் அளிக்க உள்ளதாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : விதிகனை மீறி சசிகலா சிறையில் சலுகைகள் பெற்றது தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் அளிக்க உள்ளதாக முன்னாள் டிஐஜி ரூபா கூறியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு விதிகளை மீறி சலுகைகள் அளிக்கப்பட்டது உண்மை தான் என்று டிஐஜி ரூபா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டிஜிபி சத்யநாராயணராவும் இந்த விதிமீறல்களை ஒப்பு கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவிற்கு செய்து கொடுக்கப்பட்டிருந்த வசதிகள் மற்றும் சலுகைகள் குறித்து தனது அறிக்கையில் விரிவாக கூறியிருக்கிறேன். சிறையில் சசிகலாவிற்கு சிறையில் 5 அறைகள் ஒதுக்கீடு, தனி சமையல் அறை, சொகுசு படுக்கை போன்ற வசதிகள் செய்து தரப்பட்டது முற்றிலும் உண்மை.

தனி அலுவலகம்
சசிகலா தன்னை சந்திக்க வரும் பார்வயைாளர்களை சிறை விதிக்கு மாறாக தனி அறை ஒன்றில் சந்தித்து வந்ததாகவும் குறிப்பிட்டார். சிறை வளாகத்தில் உள்ள ஒரு பயன்படுத்தப்படாத அறையை இதற்காக அலுவலகம் போலவே செட்டப் செய்திருந்தார்கள். அந்த அலுவலகத்தில் சிசிடிவி கேமரா கிடையாது.

இளவரசிக்கும் வசதி
சசிகலாவை சந்தித்து சென்றவர்கள் விவரத்தோடு சிசிடிவி கேமரா காட்சிகளைப் பார்த்த போது, அந்தக் காட்சிகளில் அவர் இல்லை. சசிகலாவுடன் இளவரசியும் அதே அறையில் இருந்ததால் அனைத்து வசதிகளும் அவருக்கும் கிடைத்துள்ளது.

சட்டப்படி சந்திக்க முடிவு
ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் கூறியதற்காக சிறைத்துறை டி.ஐ.ஜி சத்யநாராயணா அனுப்பியுள்ள நோட்டிஸை சட்டப்படி எதிர்கொள்வேன். அறிக்கையில் நான் கூறிய குற்றச்சாட்டுக்களை டி.ஐ.ஜி சத்யநாராயணாவின் வழக்கறிஞர் ஒப்புக்கொண்டுள்ளார்.

நீதிமன்றத்தில் முறையிடுவேன்
அனைவருக்கும் தெரிந்த ஒரு விதிமீறலைத் தான் நான் அம்பலப்படுத்தினேன், பின் எதற்கு தற்போது எனக்கு நோட்டிஸ் கொடுக்க வேண்டும். இதன் மூலம் சத்யநாராயணா யார் பக்கம் உள்ளார் என தெரிகிறது. நான் எந்தத் தவறும் செய்யவில்லை எனது தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் எடுத்துரைப்பேன், என்று ரூபா தெரிவித்துள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications