மூடப்பட்ட நோக்கியா ஆலை திறக்கப்படும்: பிரதமர் மோடி சூசகம்
டெல்லி: சென்னையில் மூடப்பட்ட நோக்கியா ஆலையை மீண்டும் திறக்க தனது அரசு முயற்சி செய்து வருவதாக பிரதரமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பின்லாந்தைச் சேர்ந்த பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியாவின் ஆலை சென்னை ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 2006ம் ஆண்டில் இருந்து 8 ஆண்டுகளாக இயங்கி வந்தது. அந்நிறுவன செல்போன்களை பெருமளவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் கொள்முதல் செய்து வந்தது. இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவுடனான ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு முறித்தது.

இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 1ம் தேதி சென்னையில் உள்ள நோக்கியா ஆலை மூடப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து சிபிஎம் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பினர். அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்தபோது கூறுகையில்,
உங்களின் அக்கறை சரியே. 25 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல்களாலேயே நோக்கியா ஆலை மூடப்பட்டது. அதற்கு எங்கள் அரசு காரணம் இல்லை.
வேலைவாய்ப்பை அதிகரிக்க அந்த ஆலை திறக்கப்பட வேண்டும் என்றார்.
மூடப்பட்ட நோக்கியா ஆலை திறக்கப்படும் என்று மோடி சூசகமாக தெரிவித்துள்ளார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications