ராமர் பாலம் வழியாக சேதுக் கால்வாய் திட்டம் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்!
டெல்லி: ராமர் பாலம் வழியாக சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றமாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி, மன்னார் வளைகுடாவில் உள்ள ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில், தாம் தாக்கல் செய்த மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும்; இன்னமும் மத்திய அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்யவில்லை என்று சுப்பிரமணியன் சுவாமி முறையிட்டிருந்தார்.
இந்நிலையில் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று மத்திய அரசு ஒரு பதில் மனுவைத் தாக்கல் செய்தது. அதில், மன்னார் வளைகுடாவில் உள்ள ராமர் பாலம் வழியாக சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றமாட்டோம்.
மக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து வேறுபாதையில்தான் சேதுக்கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெறுவது குறித்து வரும் 26-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications