சுனாமியை விட மிக மோசமான பேரழிவு எது தெரியுமா.. ப.சிதம்பரம் அதிரடி!
சுனாமி பேரழிவை விட பணமதிப்பிழப்புதான் மிகப் பெரிய பேரழிவு என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
மும்பை: சுனாமியை விட மனிதனால் செய்யப்பட்ட பேரழிவு எது வென்றால் அது பணமதிப்பிழப்புதான் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் இரவை யாரும் மறக்க முடியாது. அன்றைய தினம்தான் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்தார். மேலும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிவிடலாம் என்று கூறியிருந்தார்.
இதற்கு காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. மக்களும் தங்கள் அன்றாட பணிகளை விட்டுவிட்டு வங்கி வாயில்களில் காத்து கிடந்தனர்.

காத்திருக்கும்போது உயிரிழப்பு
வங்கி வாயில்களில் பெரும்கூட்டமாக மக்கள் காத்திருந்தபோது சில உயிரிழப்புகளும் நேர்ந்தன. மத்திய அரசின் இந்த செயல் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

நவம்பர் 8 கருப்பு தினம்
இந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியுடன் பணமதிப்பிழப்பு செய்து ஓராண்டு நிறைவடைகிறது. இதை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளனர். இந்நிலையில் மும்பையில் சனிக்கிழமை நிகழ்ந்த இளைஞர் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.

சுனாமியை விட பெரியது
அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், பணமதிப்பிழப்பு என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. இது கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை காட்டிலும் பேரழிவை ஏற்படுத்தி விட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது மிகப்பெரிய மோசடியாகும்.

விசாரணை நடத்தினால்
இந்த விவகாரத்தில் யாரேனும் விசாரணை நடத்தினால் உண்மை என்ன என்பது தெரியவரும். உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை தடை செய்தது தவறு என்பதை நேர்மையாக ஏற்றுக் கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மறுக்கிறது. ஜிஎஸ்டியிலும் தலைமை பொருளாதார ஆலோசகரின் ஆலோசனையை ஏற்க மறுத்து தன்னிச்சையாகவே செயல்பட்டது.

மாற்றம் வரும்
வரும் 2019-ஆம் ஆண்டு மத்தியில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும். அப்போது பொறுப்பேற்கும் புதிய அரசு ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு விவகாரங்களில் புதிய மாற்றங்களை கொண்டு வருவர் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications