விரைவில் என்.ஆர்.ஐ.களும் ஓட்டு போடலாம்!!!
டெல்லி: விரைவில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வருடாந்திர பிரவசி பாரதிய திவாஸ் நிகழ்ச்சி வரும் ஜனவரி மாதம் 7ம் தேதி துவங்கி 9ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு டெல்லியில் நடக்க உள்ளது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சியில் ஜனவரி 8ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார். ஜனவரி மாதம் 9ம் தேதி வெளிநாட்டில் சாதனை புரிந்து வரும் இந்தியர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாரதிய சம்மன் விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார்.

இந்நிலையில் இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில்,
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. தூதரகங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைப்பதா இல்லையா என்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. இதற்கு விரைவில் தீர்வு காணப்படும். பிரவசி பாரதிய திவாஸ் நிகழ்ச்சியில் சுமார் 3 ஆயிரம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சகம் குஜராத் அரசுடன் சேர்ந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் கயானா குடியரசின் அதிபர் டொனால்ட் ராமடோர். மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்து 100 ஆண்டுகள் நிறைவடைவதால் திவாஸ் நிகழ்ச்சிக்கு தென்னாப்பிரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரும் அழைக்கப்பட்டுள்ளார் என்றார்.
முன்னதாக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டதிருத்த மசோதா கடந்த 2010ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications