நுபுர் ஷர்மா சர்ச்சை.. ராஞ்சியில் பரபரப்பு.. வான் நோக்கி சுட்ட போலீஸார்.. கட்டுக்குள் வந்த போராட்டம்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில ராஞ்சியில் நுபுர் ஷர்மாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை கட்டுப்படுத்த போலீசார் வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்துகள் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு 15க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து பாஜகவில் இருந்து நுபுர் ஷர்மா இடைநீக்கம் செய்யப்பட்டார். இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும், அரசு தாமதமான நடவடிக்கை எடுத்ததாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் தொடங்கிய போராட்டம்
இந்தநிலையில் டெல்லி ஜும்மா மசூதியில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுமையை முடித்து வெளிவந்த இஸ்லாமியர்கள், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை கண்டித்து முழக்கங்கள் எடுக்கப்பட்டது. அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தது போதாது என்றும், கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கங்கள் எடுக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரம் நீடித்த போராட்டம், அடுத்த சில மணி நேரங்களில் கைவிடப்பட்டது.

அடுத்தடுத்து பரவிய போராட்டத் தீ
டெல்லியைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் லக்னோ, பிரயக்ராஜ் உள்ளிட்ட நகரங்களிலும், கொல்கத்தா, மேற்கு வங்கம், ஹைதராபாத் என பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகா மாநிலத்தில் பெலகாவி பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் நுபுர் ஷர்மாவின் உருவ பொம்மை தூக்கிலிடப்பட்டு எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதேபோல் பல்வேறு பகுதிகளில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

போலீஸ் அனுமதிக்கவில்லை
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அமைதிப் போராட்டத்திற்கு வர்த்தகர்கள் சங்கம் தரப்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதனால் காலை முதலே ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து இஸ்லாமியர்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை முடிவடைந்தவுடன் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.

போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு
இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் போலீசார் ஏராளமானோர் காயமடைந்தனர். போராட்டம் கலவரமாக மாறியதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டதோடு, போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அனைவரும் கலைந்து சென்றனர்.

உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
இதனிடையே மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களையும் அலர்ட்டாக இருக்க எச்சரிக்கை விடுத்துள்ளது. நுபுர் ஷர்மா சர்ச்சையால் இஸ்லாமியர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாநிலங்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications