பெட்ரோலிய அமைச்சக ஆவணங்கள் திருட்டு: பத்திரிகையாளர் உட்பட மேலும் இருவர் கைது!
டெல்லி: மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் ஆவணங்களைத் திருடிய வழக்கில் டெல்லி பத்திரிகையாளர் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த மோசடியில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
பெட்ரோலிய அமைச்சகத்தின் கொள்கை முடிவுகளை வெளிப்படுத்தும் ஆவணங்களை திருடி பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு கொடுத்ததாக அமைச்சக ஊழியர்கள் இருவர் உட்பட 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக டெல்லி பத்திரிகையாளர் சந்தனு சைகியா, தனியார் எண்ணெய் எரிவாயு ஆலோசனை நிறுவன அதிகாரி பிரயாஸ் ஜெயின் ஆகியோரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பணியாளர் ஒருவரையும் டெல்லி போலீஸ் தடுத்து வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் பெட்ரோலிய அமைச்சகத்தின் முக்கிய ஆவணங்களைத் திருடி 25-க்கும் மேற்பட்ட பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு கொடுத்து பணம் சம்பாதித்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெட்ரோலிய அமைச்சக ஊழியர்களின் துணையோடு சி.சி.டி.வி. கேமராக்களைத் துண்டித்துவிட்டு ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து வெளியே கசியவிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இப்படி திருடப்பட்ட ஆவணங்களை லாபியிஸ்டுகள், ஆலோசனை நிறுவனங்களுக்கு ரூ50 லட்சம் முதல் ரூ2 கோடி வரை விற்பனை செய்தும் இருக்கின்றனர். திருடப்படும் ஆவணங்களின் முக்கியத்துவத்தைப் பொறுத்து அதன் விலை நிர்ணயிக்கப்படுமாம்.
இதற்காக போலி அடையாள அட்டைகள், டூப்ளிகேட் சாவிகள் என சகல வித முறைகேடுகளிலும் இவர்கள் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களில் சந்தனு சைகியா இணையதளம் ஒன்றை நடத்தி வருகிறாராம். இதற்கு முன்னர் பிரபல நாளிதழில் வர்த்தக செய்தியாளராக இருந்தவராம். இவர் மூலமாகவும் பெரும் நிறுவனங்களுக்கு அமைச்சகத்தின் முக்கிய ஆவணங்கள் கைமாறியிருக்கிறது என்பதால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications