பெட்ரோலிய அமைச்சக ஆவணங்கள் திருட்டு: பத்திரிகையாளர் உட்பட மேலும் இருவர் கைது!
டெல்லி: மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் ஆவணங்களைத் திருடிய வழக்கில் டெல்லி பத்திரிகையாளர் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த மோசடியில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
பெட்ரோலிய அமைச்சகத்தின் கொள்கை முடிவுகளை வெளிப்படுத்தும் ஆவணங்களை திருடி பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு கொடுத்ததாக அமைச்சக ஊழியர்கள் இருவர் உட்பட 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக டெல்லி பத்திரிகையாளர் சந்தனு சைகியா, தனியார் எண்ணெய் எரிவாயு ஆலோசனை நிறுவன அதிகாரி பிரயாஸ் ஜெயின் ஆகியோரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பணியாளர் ஒருவரையும் டெல்லி போலீஸ் தடுத்து வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் பெட்ரோலிய அமைச்சகத்தின் முக்கிய ஆவணங்களைத் திருடி 25-க்கும் மேற்பட்ட பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு கொடுத்து பணம் சம்பாதித்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெட்ரோலிய அமைச்சக ஊழியர்களின் துணையோடு சி.சி.டி.வி. கேமராக்களைத் துண்டித்துவிட்டு ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து வெளியே கசியவிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இப்படி திருடப்பட்ட ஆவணங்களை லாபியிஸ்டுகள், ஆலோசனை நிறுவனங்களுக்கு ரூ50 லட்சம் முதல் ரூ2 கோடி வரை விற்பனை செய்தும் இருக்கின்றனர். திருடப்படும் ஆவணங்களின் முக்கியத்துவத்தைப் பொறுத்து அதன் விலை நிர்ணயிக்கப்படுமாம்.
இதற்காக போலி அடையாள அட்டைகள், டூப்ளிகேட் சாவிகள் என சகல வித முறைகேடுகளிலும் இவர்கள் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களில் சந்தனு சைகியா இணையதளம் ஒன்றை நடத்தி வருகிறாராம். இதற்கு முன்னர் பிரபல நாளிதழில் வர்த்தக செய்தியாளராக இருந்தவராம். இவர் மூலமாகவும் பெரும் நிறுவனங்களுக்கு அமைச்சகத்தின் முக்கிய ஆவணங்கள் கைமாறியிருக்கிறது என்பதால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications