இதை ஏன்டா படம் எடுத்த.. பத்திரிகை போட்டோகிராபரை அடிக்க பாய்ந்த காங். தொண்டர்கள்!
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் தேர்தல் பிரச்சாரம் செய்த இடத்தில் ரோட்டில் குண்டும், குழியும் இருந்ததை புகைப்படமாக எடுக்க முயன்ற ஆங்கில பத்திரிகை புகைப்படக்காரர் காங்கிரஸ் கட்சியினரால் தடுக்கப்பட்டார்.
கேரள மாநிலம், அருவிக்கரா தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் கார்த்திகேயன் சமீபத்தில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இவர் கேரள சபாநாயகராக பதவி வகித்து வந்தவர். எனவே இத்தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலை ஆளும் காங்கிரஸ் கட்சி கவுரவ பிரச்சினையாக எடுத்துள்ளது.

முதல்வர் உம்மன் சாண்டியே நேரடியாக வந்து பிரச்சாரம் செய்துள்ளார். குஷ்புவும் அனல் பறக்கும் பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் சபரிநாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்த உம்மன்சாண்டி, எனது 4 வருட கால ஆட்சிக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பெண்ணாக இந்த தேர்தலை பார்ப்பேன் என்றார்.

நான்காண்டுகால வளர்ச்சிக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பெண்ணாக இத்தேர்தலை நான் எடுத்துக்கொள்வேன் என்றும் உம்மன்சாண்டி கூறிவருகிறார். இந்நிலையில், முதல்வர் பிரச்சாரம் செய்ய வந்த இடத்தில் ரோடு குண்டு குழியுமாக இருந்ததை பார்த்துள்ளார் டெக்கான் க்ரானிக்கல் தலைமை புகைப்படக்காரர், பீதாம்பரன் பய்யேரி. எனவே முதல்வர் ஜீப் அந்த வழியாக போகும்போது, குழியையும், ஜீப்பையும் ஒன்றாக படமெடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்று திட்டமிட்டு சாலையோரமாக ரெடியாக நின்றுள்ளார்.

இதைபார்த்த காங்கிரஸ் தொண்டர்கள், இதையெல்லாம் படமாக எடுக்க கூடாது என்று பீதாம்பரியை மிரட்டியுள்ளனர். அதையும் மீறி, அவர் அங்கேயே நின்றபோது, காமிராவை பிடுங்கி, அடிக்க முயன்றுள்ளனர். அதற்குள் பிற மீடியா நிருபர்கள் அங்கு ஓடிவரவே, காங்கிரஸ் தொண்டர்கள் எஸ்கேப் ஆகிவிட்டனர்.
படங்கள்: பி.பீதாம்பரம்- டெக்கன் கிரானிக்கிள்
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications