ரசிகர்களே நம்பிக்கையுடன் இருங்கள்.. ஸ்ரீசாந்த்
பெங்களூர்: ரசிகர்கள் என் மீது நம்பிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் அப்பாவி என்பதை நிரூபிப்பேன் என்று வேகப் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேட்ச் பிக்ஸிங் புகார் நிரூபிக்கப்பட்டதாக கூறி கிரிக்கெட் வாரியம் ஸ்ரீசாந்த்துக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது நினைவிருக்கலாம்.
அவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் அங்கீத் சவானும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
டிவிட்டரில் கோரிக்கை
இந்த நிலையில் ரசிகர்களுக்கு டிவிட்டர் மூலம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் ஸ்ரீசாந்த்.
தயவு செய்து என்னை நம்புங்கள்
ரசிகர்கள் தயவு செய்து என் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நிச்சயம் நான் விரைவிலேயே தவறு செய்யாதவன் என்பதை நான் நிரூபிப்பேன்.
கடவுள் மகத்தானவர்
கடவுள் மகத்தானவர். அவர் மீதும் என் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. சீக்கிரமே இந்தப் பிரச்சினையிலிருந்து நான் விடுபடுவேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்.
மே மாதம் கைது
ஐபிஎல் போட்டிகளில் மேட்ச் மற்றும் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான புகாரை விசாரிக்க ரவி சவானி தலைமையிலான விசாரணை கமிஷனை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.