மாநில செய்தியாளர்களை குமுற வைத்த பிரதமரின் செய்தியாளர் சந்திப்பு!
டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங் நேற்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பல மாநில செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அனுமதிக்கப்படாததால் குமுறிப் போயுள்ளனர்.
நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் பொறுப்பேற்ற 10 ஆண்டுகளில் அதிகாரப்பூர்வமான மூன்றாவது பத்திரிகையாளர் சந்திப்பு டெல்லியில் நேற்று நடைபெற்றது. மொத்தம் 70 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ஆந்திரம், கர்நாடகம், மகராஷ்டிரம், காங்கிரஸ் ஆட்சியில் அல்லாத மாநிலங்கள் தொடர்பாக கேள்வி எழுப்ப செய்தியாளர்கள் முயன்றும் அதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரதமரின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த ஏராளமான செய்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை ஏற்பாடு செய்திருந்த இந்த சந்திப்பில் சுமார் 250 பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். அதில் குறிப்பிட்ட சில தேசிய, மாநில விவகாரங்களை எழுப்ப மட்டும் வாய்ப்பளித்ததாக செய்தியாளர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், ஆந்திரத்தில் நிலவும் தெலுங்கானா பிரச்னை, மகராஷ்டிர மாநிலத்தின் ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு விவகாரம், கர்நாடகத்தில் காவிரி பிரச்னை, பிற மாநிலங்களில் லோக் ஆயுக்த அமலாக்கம், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநில அரசுகள் மத்திய அரசு மீது சுமத்திவரும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்விகளை எழுப்ப செய்தியாளர்கள் ஆயத்தமாக இருந்தனர்.
ஆனால், கடைசி வரை அவர்கள் கேள்வி எழுப்ப அனுமதிக்கப்படவில்லை. இதனால், பத்திரிகையாளர் சந்திப்பின் முடிவில் சில செய்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்து கூச்சலிட்டனர்.
இதையடுத்து, அவர்களை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரியும் அத் துறை உயரதிகாரிகளும் சமாதானப்படுத்தினர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications